Tuesday, August 4, 2026

நண்பன் என்பான்

 நண்பன் என்பான் 


தூளியினின்று வெளி வந்ததும் கிடைப்பான்

   தொடர்ந்து வாழ்நாள் முழுதும் வருவான்


தோளில் கை போடும் முதல் உறவும் இவன் 

   "தோப்பில் மாங்காய் திருடுவோம்" என்பவன் 


ஆளில்லா இடம் வர அழைப்பு அது விடுப்பான்

   அத்தனை தீயவையும் சொல்லிக் கொடுப்பான் 


*வாளியாய் துயர் கேட்டு வருவான் விரைந்து 

   வாய்ப்பு வர விளிப்பான் காகமாய் கரைந்து 


மீள முடியாக் காதல் *ஆழியில் தள்ளுவான்

   மிதந்து வரும் என் முத்தையும் அள்ளுவான்


காளியாய் தன் மனைவி கண்டித்த போதும்

   காணாமல் இரான் என்னை ஒரு நாளும் 


கேளிக்கை அவனின்றி களை கட்டாது ஏதும் 

   கிட்டத்தட்ட அவனும் என் மனைவியே ஆகும் 


தாளிப்பாம் நம் வாழ்வில் தோழன் என்பான் 

   தவிர்க்க முடியாது குகன், கர்ணன் அன்னான்.


* வாளி -- அம்பு

* ஆழி -- கடல் 


__. குத்தனூர் சேஷுதாஸ் 2/8/2026

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...