🌹ஆடி 18 ஆம் நாளில்
" ஆடிப் பெருக்கு " நிகழவே
நடந்து வரும் காவிரியில்
கடந்து வந்தது " நீர்ப் பெருக்கு "
ஆடிப்பாடி மகிழ்ந்த
ஆடவரும் பெண்டிரும்
ஆர்வம் மிகு சிறுவர்களும்
ஆற்றுப் புதிய புனல் தொட்டு,
ஆரத்தி எடுத்து வணங்கி,
ஆனந்தமாய்க் கூடி மகிழ்ந்து கொண்டாடும்
ஆடிப்பெருக்கு விழாவை
ஆவலுடன் வரவேற்போமாக 🌹
நன்மை செய் நன்செயும்
புன்மை செய் புன்செயும்
கொஞ்சி விளையாடும்
தஞ்சை சூழ் பசுமை -- அன்று 👌
நம்மைக் காக்க, நலம் தரும் வருணன்
நம்பொருட்டு, அங்கு பொழிய......
கள்ளத்தனம் புரிந்த கருநாடகா
வெள்ளத்திற்குப் பயந்து அணையைத்
திறந்து விட்டதையா..... பாரீர் !
மறந்தும் மாறிடாதீர், இயற்கைக்கு மாறாக !
ஆகையால்,
🌴 நடுவோம்! ☔️ பெறுவோம்!!
- ராஜா முஹம்மது
No comments:
Post a Comment