Saturday, August 1, 2026

வீடு!

 வீடு! 


திண்ணையும் தென்னையும் பேசும்!

தெருவில் தேன் சிட்டு விளையாடும்! 

தெற்கு தெரு வடக்கு தெரு என்று திசை பேசும்!


தெரிந்தவர் தெரியாதவரும் 

தாகம் என்றால் வற்றாத இளநீரும் மோரும்!

வற்றிப்போன வத்தல்களும்! ஊரிப்போன ஊறுகாய் ஜாடிகளும்! 

வக்கனையா சாப்பிட்டு வளர்ந்த வயிற்றை தாலாட்ட கையிற்று கட்டிலும் !


மழையில்,  செந்நிற ஓட்டின் வாசமும்! 

வெயிலிலும் மணம் வீசும் வெங்காய வடகமும்!

காற்றுப்புகாத அறைவீடும்!

அதில் சேர்ந்த முறுக்குக்களும், நொறுக்குகளும்!



மங்கி போன நேரத்தில் மங்களமான பாட்டும்!

ஜோடி போட்டு நடக்கும் டபரா செட் காபிகளும்!

மாடகுழிகளில் மணி மணியாக எரியும் விளக்கும்!

வாடைப்பொழுதில் நந்தியாவின் புன் முறுவலும்,

விளக்கின் உச்சி முதல் பாதம் வரை மாலையாக மாறினதும்!


மீந்து போன மதிய சோறு நிலா சோறு ஆனதும்!

கையிலே உருண்டைகளும் காதிலே கதைகளும்!

30 40 நட்சத்திரங்கள் எண்ணுவதும்!

வானொலியின் இரவின் மடியிலும்!

சின்ன சின்ன தலைகள் உறவின் மடியிலும்!

சிறு மொட்டும் தொட்டிலில்,தாலாட்டு மெட்டில் அழகாக கண்ணுரங்கும்!!


ஆனால் இன்றோ, வீடு தனிமை பட்டது! வெவ்வேறு பட்டினப் பிரதேசத்தால் வறுமை பட்டது!

உறவுகள் கட்டின கூடும் பழமை  பட்டது!

துரிதமாக செல்லும் உயிரே உறவே கொஞ்சம் திரும்பி பாராய்!

துயில் கொண்டாயோ! கொஞ்சம் எழுந்து வாராய்!

இது நிழல் அல்ல நிஜம்!



- ,தேவி அருண்

 _கவிதை எழுதியவர் 

தேவி அருண்_

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...