Thursday, August 6, 2026

காத்திருப்பு

 காத்திருப்பு

 ரஞ்சனிக்கு  வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது. இந்த காத்திருப்புக்கு ஒரு முடிவே கிடையாதா.! சே! என்று அலுத்துக் கொண்டாள். கண்களில் தண்ணீர்  தளும்பி வந்தது. எல்லாம் என் தலையெழுத்து! எத்தனை நாளா நானும் காத்திருக்கிறது. கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?. நடுவில் தொலைபேசியில் யாரோ அழைக்க, ஒருவேளை அவனாக இருக்குமோ? ஓடிச்சென்று எடுத்தால் மறுமுனையில் மேடம் லோன் தரோம், வாங்கி கிறீங்களா? என்ற குரல் கேட்டது. அட! வையம்மா போனை , நேரம் காலம் தெரியாம,என்று மிகவும் சலிப்புடன் கூறிவிட்டு போனை டப் என்று வைத்தாள்.  ஒருவேளை மெசேஜ் ஏதாவது வந்திருக்கிறதா என்று ஆவலுடன் பார்த்தாள் அதிலும் இல்லை. . ஐயோ கடவுளே என்னை ஏன் இந்த மாதிரி சோதனை பண்ற எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது. பக்கத்து வீட்ல பிரியா, ரம்யா எல்லாருக்கும் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்க ஏன் எனக்கு மட்டும் இப்படி சோதனை பண்ற என்று வாய் வட்டு கதறினாள். விளையாட்டு போல் ஒரு மாதம் ஆகிவிட்டது இதோ அதோ என்று அவளும் நாட்களை தள்ளி வந்தாள். இனி முடியாது.தினமும் எவ்வளவு சிரமமாக இருக்கிறது. வேறு யாரும் உதவி செய்யவும் முடியாது என்று கூறுகிறார்கள் என்னதான் பண்ணுவது? கொஞ்சமாவது கஷ்டம் தெரியுதா? அவளும் இந்த எண்ணத்தை மாற்ற தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பார்த்தாள்.  கொஞ்சம் வாக்கிங போயிட்டு வந்தாள். ஆனா மனசு என்னமோ இதையே சுத்தி சுத்தி வருது. 

அவன் வருகைக்காக தினம் தினம் ஏங்கி ஏங்கி மனம் வேதனைப்பட்டது.  என்னமோ குடிமுழுகி போன மாதிரி  மூஞ்ச தூக்கி வச்சுட்டு உட்கார்ந்து இருக்கா பாரு, என்று மாமியார் இவளைப் பார்த்து சொன்னதும், உங்களுக்கு என்ன கஷ்டம் தெரியும் எனக்கு இல்ல அந்த கஷ்டம் தெரியும் நீங்க நல்லா சந்தோஷமா இருக்கீங்க எனக்கு அப்படியா? என்று பதிலுக்கு கத்தினாள். ஆமா நாங்க அந்த �


ஆமா நாங்க அந்த காலத்துல படாத கஷ்டம் தான் நீங்க பட்டுட்டீங்க எல்லாத்தையும் பெருசு பண்ணுவாங்க இந்த காலத்து பசங்க என்று மாமியார்க்காரி பதிலுக்கு வாய் அடித்து விட்டு சென்றாள்.

சரி சற்று  கண்ணயறலாம் என்று அவள் உள்ளே சென்றபோதுதான் அந்த அழைப்பு மணி கேட்டது. ஏக்கமும் ஆவலும் பொங்க அவள் ஓடினாள். கதவை திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி.  அங்கு நின்று கொண்டிருந்தவனை பார்த்ததும் கண்களில் நீர் வழிந்தது.ஏம்மா ராமநாதன் வீடு இதுதானே ? ஆமா வாங்க வாங்க உங்களை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் என்று ஆவலாக கதவை திறந்து விட்டாள்.  சரி எங்கம்மா வைக்கணும் இந்த கேஸ் சிலிண்டரை என்று கேட்டவனை காலில் விழுந்து வணங்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு. அப்பாடா ...ஒரு வழியா வந்து சேர்ந்தது என்ற நிம்மதி பெருமூச்சுடன் கேஸ் வாங்கி வைத்துவிட்டு உறக்கச் சென்றாள் ரஞ்சனி.

-சிறுகதை 

-லதா கணேசன்



No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...