வாழ்க்கை என்றும்
ஒரு
விளக்கக் கையேட்டுடன்
(Manual)
வருவதில்லை.
மாறாக
ஒரு
அன்னையுடன்
ஆரம்பம் ஆகிறது.
- முகம்மது சுலைமான்
==================================
அன்னையர் நள்..
தாத்தாவாகி போனாலும் உன்
தாயிக்கு நீயொரு குழந்தை தான்.
ஆத்தா பட்ட கஷ்டங்களை நினைத்தால்
ஆயிரம் வருஷமானாலும் நீ அடிமை தான்.
அன்னையை போற்றுவோம்.
அன்பால் அவளை வெல்வோம்
அன்பை பொழியும் அனைவருக்கும்.
அன்னையர் நாள் வாழ்த்துகள்
-அக்ரி சா.இராஜா முகமது 💐
================================
தொலைந்து போகும் வரை...
மட்டைப்பந்தில் தமிழ்ச் சங்கம் தோய்ந்திருக்க
மண்ணில் நமை ஈன்ற " தாய்மை " உமை ஈர்க்க
பட்ட அவள் வேதனைகளைப் பட்டியலிட்டீர்
பாவம் அதரம் கடித்து ஈன்றதைச் சொன்னீர்
வட்ட நிலா காட்டிச் சோறூட்டிய உறவு
வள்ளலாய் பால் தந்த வான் காமதேனு
தொட்டிலில், தூளியில் தூங்க நமை வைத்தவள்
*தொலைந்து போகும் வரை கண்ணீர் துடைத்தவள்.
* தொலைந்து -- இறந்து
__. குத்தனூர் சேஷுதாஸ் 10/5/2026
No comments:
Post a Comment