அறுகோண வடிவில் அழகு மெழுகு வீடு
ஆயிரம் அதுபோல் சேர்ந்தால் தேன்கூடு
சிறுசிறு மலர்களைத் தேடிச் செல்லும் தேனீ
செந்தமிழ் நேர் தேனைக் கண்டிடும் ஞானி
உறிஞ்சிக் கொண்டு வந்து ஓயாமல் சேகரிக்கும்
ஊரார் கண்படாமல் இருக்க வேண்டும் பாவம்
" நறை " என்பார் நற்றேனை இலக்கியத்தில்
" *ஞமலி " க்கு பிடிக்காது. உண்மை உண்டா இதில் ?
சிறந்தவன் தானெனக் கூறிக் கொள்ளும் மனிதன்
செயற்கையானதைத் தேனென விற்பவன்
இறந்த உடலைப் பாதுகாக்கவும் அன்று
இனிய தேனில் உடல் ஊறியதும் உண்டு
மறுக்க முடியா மருத்துவப் பயன் பலவாம்
மாந்தர் தம் நோய் எதிர்ப்புச் சக்தி கூடுமாம்
குறிஞ்சி நிலத் தேனே (மலைத் தேன்) சிறந்ததென்பார்
குத்தனூர் தாமரைக் குள நீர் அருந்தாதார்.
__. குத்தனூர் சேஷுதாஸ் 20/5/2026
No comments:
Post a Comment