நான் உங்களுக்கு வேண்டுமா?வேண்டாமா?
என்ன சுயநலம்!!!
உங்களுக்கு தாளிப்பு வேண்டும்
என என்னை எண்ணெயில்
தத்தளிக்க வைப்பீர்கள்...
உணவுக்குள் வந்த பின்னே
ஓரமாய் ஒதுக்கி வைப்பீர்கள்...
உயிர் தப்பினேன் என்று
உவகை கொள்ளவா?
குடலுக்கு போகாமல் குப்பைக்கு போவதற்கு குமைந்து போகவா?
உருவி உருவி போட்டது எதற்கு?
உம் உடலுக்குள் சத்துகளை சேர்க்க
உரிமை இல்லையா எனக்கு?
கோபமாய் கேட்பது நானில்லை.... கரு(றி)வேப்பிலை!!!
உதாசீனம் தாங்காமல்
அது சண்டைக்கு வந்தால்
நான் பொறுப்பில்லை...
- சாய்கழல் சங்கீதா
========================
😭உங்கள் *உப்புமா* கவிதையில் நான் மட்டும் எஞ்சுவதேன்❓
கரிசனை இல்லாமல்- என்னை
கைகளால் உருவி போடாமல்
கத்தரிகோலால் துணுக்குகளாய்
கத்தரித்து போட்டால்
கரைந்து போவேனே
நானும் உங்களுடலில்❗
இப்படிக்கு,
*அக்கறையுடன் கறிவேப்பிலை*
- ,திருஞானசம்பந்தம்
==============================
தங்கள் உப்புமா போல இருக்காது, எனக்கு தெரிந்த உப்புமா 😄
கண்களுக்கு நான் நல்லவனாம்
கருங்கூந்தலுக்கு நிறம்
சேர்ப்பவனாம்
இரும்புச்சத்தில் சிறந்தவனாம்
இன்னல்கள் பல தீர்ப்பவனாம்
வேப்பிலையை என் பெயரில் கொண்டவனாம்
வேண்டி உண்பவர்களுக்கு அருமருந்தாம்
இத்தனை இருந்தும் இலவசமாய் கிடைக்கும் என்னை
இன்னமும் உண்ணாமல் ஒதுக்குவதேனோ??!!
இப்படிக்கு
கருவேப்பிலை
- பத்மாவதி,
================
=========================
-
No comments:
Post a Comment