*சமூக வலைதளங்களில் தட்டெழுதுதல்*
விரல்களின் ஆரோக்கியத்தை
மேம்படுத்தும் பயிற்சி
கண்களின் ஆரோக்கியத்தை
புறந்தள்ளும் முயற்சி
எழுத நிச்சயம் வேண்டும்
அடிப்படை சொல்லாட்சி
எழுதியே காட்டலாம்
விதவிதமான காட்சி
ஏற்க மறுக்கும் உண்மைகளை
எடுத்துரைக்கும் புரட்சி
உண்மைகள் ஒளிக்கப்பட்டால்
அறத்திற்கு நேர்ந்த வீழ்ச்சி
பொய்மையை பரப்பி யாரையும் செய்யக்கூடாது இகழ்ச்சி
கண்காணிக்க ஒரே சாட்சி
நம் மனசாட்சி
இருக்கவேண்டியது தலைப்பைப்
பற்றிய ஆராய்ச்சி
இருக்கக்கூடாதது கருத்துகளில்
வறட்சி
சமூகத்தில் அறம் சிறக்க
தட்டெழுதுவதே மாட்சி
மூளை கொண்டு தூவிய விதைகள் முளைத்தெழுந்தால் மகிழ்ச்சி..
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment