பெரியதாய் எதிர்பார்க்கையில், சிறியதாய் வந்து உன் கால்களை முத்தமிடுவேன் ;
சிறியதாய் எண்ணி ஏளனம் செய்யும் பொழுது,
பெரியதாய் வந்து திணறடித்து செல்வேன் ;
எது எப்படி இருப்பினும் ,உறுதி உன்னுடையது;
உன் வாழ்க்கையின் துன்பங்களும் என்னை போன்றே;
சிறியதாய் இருப்பின் நிம்மதி கொள்,
பெரியதாய் இருப்பின் மூழ்கி விடாமல் எழுந்து நில் ;
வந்த வழியே சென்று விடும்
எது எப்படி இருப்பினும்
உறுதி உன்னுடையது...
இப்படிக்கு
அலை
No comments:
Post a Comment