*என்ன காரணமோ??*
தாலாட்டும் தருணத்தில் தாய்!!
தடைகளை தகர்க்கையில் தமையன்!!
ஐயத்தைத் தீர்க்கையில் ஆசான்!!
தாங்கி நிற்கையில் தோழன்!!
தேவைகளை பூர்த்திப்பதில் பொருளாளர்!!
பாதையில் வழிநடத்துகையில் ஆலோசகர்!!
மனக்குழப்பத்தை தீர்த்து வைப்பதில் உளவியலாளர்!!
எத்தனை வேடங்கள்,எத்தனை வேதனைகள் !!
எதனையும் உரைக்காமல், இன்முகத்தோடு நிற்பார் !!
தாயின் சிறப்பை கொண்டாடும் உலகம்
தந்தையை மறந்ததேனோ!!!!
இமயம் சரிந்தவுடன் இயம்பட்டும் வெற்றிடம்
என்ற எண்ணத்தில் தானோ!!!!
No comments:
Post a Comment