பச்சோந்தி!
ஒரு கவிதைப் பூவின் நிறம்
இன்னதென அறுதியிட்டு
இயம்பிட இயலுமோ?
பல்வேறு உள்ளத் தோட்டங்களில்
வெவ்வேறு நிறத்திலல்லவா
பூக்கின்றது!
- சாய்கழல் சங்கீதா
==============================
இயற்கை வரைந்த ஓவியம்
அதுவே ஒரு நிறம்
நிறக் கண்ணாடி கண்களுக்கு
அதுவே வேறு நிறம்
கவி வடித்த கவிதை
உதிர்த்த கருத்து ஒன்று
மனக்கண்ணாடி வாசிப்பில்
உதித்த கருத்தோ வேறொன்று...
- அமுதவல்லி
============================
*கவிதைக்கு நிறம் மாறுது* (படிக்கிறவங்க படி மாறுது)
*கவிஞனுக்கும் நிறம் மாறுது* (மூட், டென்ஷன், கோபம், சந்தோஷம் எல்லாம் வெவ்வேற நிறமா வருது)
*ஆனா சமூகத்துல* இன்னும் *நீ எந்த ஜாதி/வர்ணம்* னு பாக்குறது மட்டும் மாறவே இல்லை.
அதனால் தான், *மனிதனை பச்சோந்தி* என்று அழைக்கவே கூடாது 😆
- தியாகராஜன்
No comments:
Post a Comment