கதிரவன்
--------------
சாய்கழல் வீட்டு வலையில் சிக்கியிருந்த நான்
இவரல்ல..
இவர் க(சு)டும் உழைப்பாளி..
உழைத்ததையெல்லாம்
உமிழ்ந்துவிடும் செலவாளி உலகத்தாருக்கு
உழைத்துக் கொட்டும்
கொடையாளி..
நான் என்றும் இவருக்கு கடனாளி..
எனினும் நானே
கவிதைகளுக்கும் காதலுக்கும் பொறுப்பாளி..
அன்று என்னை காண்பித்து சோறூட்டியது ஓசி..
இன்று உங்கள்
குழந்தைகளின் கையில் விலைமிகுந்த கைபேசி..
கண்கள் கெட்ட பின் இவரை வணங்கி என்ன பயன்?
விண்ணில் பந்தாய்
நான் மிதந்தும் என்ன பயன்?
வட்ட நிலவே!
--------------------
வட்ட நிலவே!
வாட்டம் ஏனோ?
வட்ட வட்ட அப்பளங்களை
சுட்டு சுட்டே
வாழ்க்கை வட்டம்
தான் சுருங்குமோ?
வட்ட வட்ட அப்பளங்களைப்
போல்
வட்ட வட்ட கனவுகள் நொறுங்கித் தான் போகுமோ?
விட்டம் தெரியாத வானில்
சிறகை விரித்து வட்டமடிப்போம் வா !
வட்டமான அப்பளங்களை
சுட்டு வைப்பதே
நொறுக்கித்
தின்னத்தானே!
வண்ண வண்ணக் கனவுகளும் அப்படித்தானோ!?
- சாய்கழல் சங்கீதா
----=============
நிலவு காயுதுன்னு வலைவழி பார்த்த போது..
தோசைகல்லு
காயுதுனு கூப்பிட்ட
அந்த குரல்..
ரெண்டு வட்டதுக்கும் இந்த பெண் வலை மீது சிக்க ஆசை..
பாவம் இடையில் சிக்கி தவிக்கும் வலை..
- தேவி அருண்
=======================
வானத்தில் இயற்கை அன்னை இட்ட
வட்ட தோசையை திருப்பிப் போட அந்த கரண்டியோ!
- ஸ்ரீவி
================================
வாழ்க்கையே ஒரு வட்டம்..
வட்டத்துக்குள் வட்டமடித்தாலும்
வாழ்க்கை சிலருக்கு ஊட்டம் தருவதாக இருக்கிறது.
பலருக்கு வாட்டம் தருவதாக இருக்கிறது.
எல்லோருக்கும் ஏற்றம் தருவதாக இருந்தால்..
வாழ்க்கை எனும் வானில்
சிறகடித்து வட்டமிடலாமே!
- பத்மாவதி
No comments:
Post a Comment