*அ* னு தினமும் நாம் இங்கே மகிழ்வுறவே
*ஆ* ர்வத்துடன் நாமெல்லாம்
*இ* ணையற்ற செம்மொழியில்
*ஈ* டிகை° எடுத்து எழுதி வந்தால்
*உ* லகம் முழுதும் தமிழ் செழிக்கும்
*ஊ* ற்றுப் பெருக்காய்
கவிகள் ஊறும்
*எ* ழுத்தெல்லாம் கோத்தெடுத்து
*ஏ* ற்றம் தரும் சொற்கள் தொடுத்து
*ஐ* க்கியமாய் நாமெல்லாம்
கரமிணைத்து
*ஒ* ப்பிலா தமிழ்
புகழ் பாடி
*ஓ* ங்கி நாமும் முழங்கிடுவோம்
*ஔ* வை போற்றிய தமிழ் வாழி!
*நற்றுணையாவது நம் தமிழே!*
*நற்றமிழ் என்றும் நம் உயிரே!!*
*அனைவருக்கும் தாய்மொழி திருநாள் நல்வாழ்த்துகள்*
*உங்கள் தோழன் ஸ்ரீவி*
No comments:
Post a Comment