காலை கதிரவன் - கடும் பனி விலக
விலகிய திரைச்சீலை - வெள்ளென வானம்
வானம் முழுவதும் - வலம் வந்த பறவைகள்
பறவைகளின் ஓசை - பண்ணிசையாய் ஒலிக்க
ஒலித்த அவ்வோசையில் - ஓராயிரம் கீதங்கள்
கீதத்தின் இனிமை- காதுகளில் வருட
வருடிய கூச்சத்தால் - வாய்விட்டு சிரித்தாள்
சிரிப்பதை விடுத்து சீக்கிரம் எழுது
எழுப்பிய ஆசிரியையை - எட்டப்பனாய் பார்த்தாள்
பார்த்த பொழுதே புரிந்தது- தானிருப்பது தேர்வறையென்று!!!!
No comments:
Post a Comment