÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
*கற்றது என்ன?*
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
முதுகில் 'சுள்'ளென கதிரொளி விழுகிறது.
முதியவரின் உடலெங்கும் உஷ்ணம் பரவுகிறது
உழைத்துக் களைத்த உடம்பெங்கும்
வலி இருக்கிறது
இல்லம் திரும்ப பேருந்துக்காக
நிற்கையில்
உடலின் வலி அதிகமாக
தெரிகிறது...
பெஞ்சு மீது மூவர் அமர்ந்து இருக்கின்றனர்.
மையத்தில் இருப்பவளோ பள்ளி செல்லும் சிறுமி..
வயது முதிர்ந்த முதியவர் ஒருவர்
நிற்கும்போது
இடம் தந்து உதவாமல்
சொகுசாக அமர்ந்திருக்க
பார்ப்போரின் மனதில் வலி தோன்றுகிறது
பெரியோருக்கு இடம் தராது
இருக்கையில் அமர்ந்திருக்கும்
இதுபோன்ற குழந்தைகள் கற்றது தான் என்ன!
பள்ளிக் கல்வியால் பெற்றதுதான் என்ன?
இப்படத்தில் காணும் காட்சி
பற்பல பொது இடங்களில் நாம் காண்பவையே!
முதலில் குழந்தைகள் மனிதத்தை கற்கட்டும்!
நல்ல மனிதனாய் வளரட்டும்!!
பள்ளிகள் அதை செய்யத் தவறின்
மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பு தரும்
என நாம் யாரும் நினையாது
நற்பழக்கங்களை
குழந்தைகளுக்கு நாம் கற்பிப்போம்!
நற்குண நலன்களை
குழந்தைகளின் மனதிலே
விதைத்திடுவோம்!
நல்ல மனிதர்களாய் அவர்களை வளர்த்திடுவோம்!!
*ஶ்ரீவி*
No comments:
Post a Comment