பாரதி
ஓ பாரதி !
சொற்சுவை
பொருட்சுவை
கூட்டி
தீந்தமிழை ஊட்டி
சுதந்திரத் தீ மூட்டி
தீமைகளை வாட்டி
நீதிநெறி நாட்டி
மூட நம்பிக்கை ஓட்டி
புதுவுலகம் காட்டி
அரும் கவிதைகளை
எழுதினாய் நீ..
உனக்கு தலைப்பாகை
கோட்டு மாட்டி
உன் புத்தியைத் தீட்டி
உன் எழுதுகோலை ஆட்டி
"மகாகவி பாரதி" என்ற பட்டமும் சூட்டி
எழுத வைத்தது யாரோ?
பாரதி!!!
உனக்கு தமிழ் ஊட்டினாளே
ஒரு சீமாட்டி..
உனக்கு முன்னரே
தமிழன்னையின்
அருள் பெற்றாள்
ஆத்திசூடிய மூதாட்டி
நம் ஔவைப் பாட்டி!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment