Thursday, January 22, 2026

*மழைச் சாரலில் நனைவது பேரானந்தம்*

 °•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°

*மழைச் சாரலில் நனைவது பேரானந்தம்*

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°


கீழ் திசை வானம்

ஏனோ இன்று சிவக்கவே இல்லை..


கார்மேகம் சூழ்ந்த

கதிரவன் ஒளி வீசவே இல்லை!


காலை முதல் தூவானமாய் 

தூறலின் சிதறல்! 


கூதல் காற்றோடு 

குற்றால அருவியாய் 

சாரலின் பரவல்! 


துளித்துளியாய் மழைத்துளி பூமியில் வீழ்கையில்


குடை பிடித்து அமர்ந்திருக்கும் 

சிறுவனும் சிறுமியும்..


கையில் குடை இருந்தாலும் மழையில் நனைந்தபடி 


*மழைச் சாரலில் நனைவது பேரானந்தம்*


*குடையை மடித்து விட்டு அனுபவி அண்ணா*


சொல்கிறாள் இந்த தேன் சிட்டு.

அனுபவித்தவர் ஆமோதிப்பர் உடன்பட்டு...


*ஶ்ரீவி*


==============



இடிகள் கோஷமிட

கருவானம் வேஷம்

கலைத்து பெய்துவிடும்

விஷம் நீங்கிய

மாசற்ற மழை நீரில் 

நனைவது மிகவும் பிடிக்கிறது...

சந்தோஷம் தான்!

என்ன செய்வது...??!

ஒரு நிமிஷம் நனைந்தாலும்

உடனே பிடிக்கிறதே 

ஜலதோஷம் தான்...!


- சாய்கழல் சங்கீதா


=================


மழை


தூறலாய், சாரலாய்

பெய்யும் போது 

பேரானந்தம்.


பள்ளி விட்டவுடன் 

சிலு சிலுவெனப் 

பிடித்த மழையில் 

வகுப்புத் தோழர்களுடன் 

நனைந்தபடி ஓடியது 


கொட்டும் மழையில் 

சிற்றாறாய் ஓடும் நீரில்

நோட்டுப் புத்தகத் தாளைக் 

கிழித்து படகு செய்து 

போட்டியிட்டது 


மழை விட்ட தூவானத்தில் 

அடுக்குமாடி வீடுகளால் 

மறைக்கப் படாத 

வண்ண வண்ண 

வானவில்லை 

இரசித்தது 


மழை என்றும்

நம் சிறு வயதுத் 

தோழன்


- முகம்மது சுலைமான்

===

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...