பத்து ரூவா டாக்டர் மறைந்தார்
ஒத்தைத் தலைவலி என சென்றால் வைத்தியர்
ஊருபட்ட பரிசோதனை செய்யச் சொல்கிறார்
கத்தியைக் காட்டி மிரட்டாத குறைதான்
காலனே தேவலை என்னும் நிலைதான்
சொத்தை எழுதி வாங்கும் காலமும் வரும்
சொல்வது அதிகமென எண்ணத் தோணும்
பத்து ரூவா வாங்கிய Dr. இரத்தினம் பிள்ளை
பாவம் இனி என்ன செயும் பட்டுக்கோட்டை .
__. குத்தனூர் சேஷுதாஸ் 7/6/2025
No comments:
Post a Comment