Monday, March 9, 2026

San Antonio ஆற்று நடை-பயணக் கட்டுரை(7)

 பாகம் 7

பயணங்கள் முடிவதில்லை

*இந்த பயணக் குறிப்புகள் தீர்ப்புகள் அல்ல; அனுபவங்களின் தடங்கள் மட்டும். நான் கண்ட காட்சிகள், நான் கணக்கிட்ட எண்ணங்கள், நான் உணர்ந்த மாற்றங்கள் அவற்றின் பதிவு. பார்வைகள் பலவாக இருக்கலாம்; என் பார்வை இவ்விதம்.*

*San Antonio River Walk ஒரு மனிதரின் கனவு ஒரு நகரத்தின் நனவு*


*ஒரு நகரம் தனது நதியை மறைக்க நினைத்தது…*

*ஒரு மனிதர் அதை உலகம் பார்க்கும் அழகாக மாற்ற கனவு கண்டார்…*

 

*அந்த கனவின் பெயர்தான் San Antonio ஆற்று நடை.*


டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் அன்டோனியோ நகரின் இதயத்தில் அமைந்துள்ள San Antonio ஆற்று நடை (Paseo del Río) அமெரிக்காவின் மிகவும் அழகான நகர்ப்புற நடைபாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

நகரத்தின் நடுவே ஓடும் சான் அன்டோனியோ ஆற்றங்கரையை சுற்றி, தெரு மட்டத்திலிருந்து சில படிகள் கீழே அமைந்துள்ள பசுமையான Cypress மரங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதைகள், தனித்துவமான அனுபவத்தை தருகிறது.

ஆற்றின் இருபுறமும் உணவகங்கள், கடைகள், உணவகங்கள், சிறிய கஃபேக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் வரிசையாக அமைந்துள்ளன.


மெதுவாக ஓடும் நீரில் சிறிய சுற்றுலா படகுகள் செல்கின்றன. நதிக்கரையை ஒட்டி நடந்து செல்லும் போது நகர வாழ்க்கையின் உற்சாகமும் இயற்கையின் அமைதியும் ஒரே நேரத்தில் உணர முடிகிறது.


ஸ்பானிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அழகிய பாலங்கள், இரவில் ஒளிரும் வண்ண விளக்குகள் இவை அனைத்தும் சேர்ந்து அந்த இடத்தை ஒரு மந்திரமயமான சூழலாக மாற்றுகின்றன.


இதனால் தான் பலர் இதை

*American Venice* என்று அழைக்கிறார்கள்.

ஆற்று நடை (River Walk) இன் மொத்த நீளம் சுமார் 15 மைல்கள் (24 கி.மீ). இதில் முக்கிய பகுதி (Downtown) மிகவும் கலகலப்பானது. உணவகங்கள், இசை, இரவு வாழ்க்கை, சுற்றுலாப் பயணிகள் எல்லாமும் அந்தப் பகுதியை ஒரு கொண்டாட்டமாக மாற்றுகின்றன.


*ஒரு சுவாரஸ்யமான பின்னணி…*


1921-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் சான் அன்டோனியோ நகரத்தை அதிர்ச்சியடைய வைத்தது. அதன் பிறகு, இந்த நதியை மூடி சாலையாக மாற்ற வேண்டும் என்ற யோசனையும் எழுந்தது.


அந்த நேரத்தில் ஒரு இளம் கட்டிடக் கலைஞர் *Robert H. H. Hugman வேறொரு கனவை முன்வைத்தார்.*


*நதியை மறைக்க வேண்டாம். அதை அழகாக்கி நகரத்தின் பெருமையாக மாற்றலாம் என்று*


அவரது சிந்தனை தான் இந்த ஆற்று நடை (River Walk) யின் விதை.


1930களில் தொடங்கிய அந்த முயற்சி, பலரின் உழைப்பும் காலத்தின் வளர்ச்சியும் சேர்ந்து இன்று உலகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை கவரும் ஒரு அற்புதமான இடமாக மாறியுள்ளது.


சான் அன்டோனியோ ஆற்று நடை என்பது

ஒரு நதி மட்டுமல்ல…


*ஒரு மனிதரின் தைரியமான சிந்தனையின் வெற்றி.*


*மூடி விடலாம்* என்ற எண்ணத்தை

*மலரச் செய்யலாம்* என்ற கனவு வென்ற கதை அது.


*ஒரு நகரம் தனது நதியை பாதுகாத்ததால், அது இன்று அந்த நகரத்தை உலக வரைபடத்தில் உயர்த்தி நிறுத்தியுள்ளது.*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...