!!*பணம் எனும் மனம் மயக்கும் மந்திரம்*!!
பாசத்தைக் கட்டி பணத்தை சேர்த்து கண்ணம்மா,
அதை பாங்காக வைக்காவிட்டால் கண்ணம்மா!!
பார்ப்பவர் பரிகசிப்பார் கண்ணம்மா,
அந்த பாவம் நமக்கு வேண்டாமடி
கண்ணம்மா!!
கண்டிப்பாய் கட்டி காத்தால் கண்ணம்மா,
அந்த கஷ்டம் நம்மை
விட்டோடிம் கண்ணம்மா!!
காசேதான் கடவுளடி கண்ணம்மா,
அதை அந்த கடவுளும் அறிவாரடி கண்ணம்மா!!
இதை நான் சொல்லாவிட்டால் கண்ணம்மா,
உண்மை இன்பம் அங்கே வாரது கண்ணம்மா!!
சத்தியமாய் நான் சொல்வேன் கண்ணம்மா,
தினம் சந்தோஷமாய் வாழ்ந்திடுவோம் கண்ணம்மா.
சிசு.
No comments:
Post a Comment