"மாதராய் பிறக்கவே
மாதவம் செய்திட வேண்டும் அம்மா"
"பெண்கள் நம் நாட்டின் கண்கள்"
"ஒரு பெண் கற்கும் கல்வி
ஒரு தலைமுறைக்குக் கற்பிக்கும் கல்வி "
அடுத்தடுத்து அடுக்கினார் ஆசிரியர்
ஆமோதித்து கேட்டனர் அங்கிருந்த மக்கள்
பள்ளியின் சேர்க்கை படிவத்தில்
ஐந்து பெண் பிள்ளைகளின் பெயர்கள்
பெருமையுடன் ஒரு பார்வை பார்த்து
பகட்டாய் கிளம்பினார் வீட்டிற்கு
வீட்டின் முன் அறை
கயல்விழி ! அடியே கயல்விழி!!
வீடு திரும்பிய வீட்டுக்காரருக்கு
விருந்தளிக்க வராமல்
அங்கென்ன செய்கிறாய் ??
விழுந்தடித்து ஓடி வந்தாள் கயல்விழி
நாளை தேர்விற்கு படித்து கொண்டிருந்தேன்
மென்று விழுங்கினாள் அப்பேதைப்பெண்
வீட்டில் வசிக்கும் கழுதைக்கு படிப்பென்ன முக்கியம் ?
விருந்துண்ண வரலாமா ?
விடாமல் கேட்டார் ஆசிரியர்
விறுவிறுப்பாய் வேலை பார்த்தாள் கயல்விழி
விரைந்து விருந்துண்ண தொடங்கினார்
உடனே உன் படிப்பை நிறுத்திவிடு
சொல்லி முடித்தார் ஆசிரியர்
திடுக்கிட்டு திரும்பினாள் கயல்விழி
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு !! என்று வினவினார்
இருமுகம் கொண்ட தன் தந்தையின்
நிஜமுகம் எதுவென்று திகைத்து நின்றாள் கவிமகிழினி !!!!!
No comments:
Post a Comment