நம் தமிழக அரசு வழங்கும் சிறந்த சின்னத்திரை நடிகர்களுக்கான விருதுகள் வரிசையில் *சிறந்த குணசித்திர நடிகர்* எனும் விருது நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் நிதிச்செயலர் அன்பிற்கினிய *திரு. சாய்ராம்* (நீதானே என் பொன்வசந்தம்) அவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரிடம் நாம் சொல்ல விரும்புவது *நீர்தானே எம் வசந்தம்*
தகுதியான ஒரு நபருக்கு அந்த விருது வழங்கப்படுவதால் அந்த விருந்துக்கு மதிப்பு கிடைத்திருக்கிறது என நாம் கருதுகிறோம்.
நமது நிதிச் செயலர் கிரீடத்தில் இன்னும் ஒரு வைரக்கல் இது.
மேலும் பல உச்சங்களைத் தொட நமது சங்கம் மனதார வாழ்த்துகிறது.
நமது மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் நிதிச் செயலர் சாய்ராம் அண்ணாவிற்கு தமிழக அரசு *சிறந்த குணசித்திர நடிகர்* விருது கொடுத்து வழங்குவது நம் அனைவருக்கும் பெருமையே.
நாம் பெருமை கொள்வது மிகச் சரியே, என்றாலும் இந்த விருது முழுக்க முழுக்க சாய்ராம் ஐயா அவர்களின் 40-45 ஆண்டுகால பயணத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்பதை நாம் உணர வேண்டும். மேடைப் பாடகராக, நகைச்சுவை திலகமாக, மேடை நாடக நடிகராக, சின்னத்திரை - பெரிய திரை கலைஞராக எத்தனை எத்தனை அவதாரங்கள்... எத்துணை எத்துணை மேடைகள்...
எவ்வளவு அனுபவங்கள்..
என அவரது கலை தாகத்தின் பயணத்தில் - தேடலில் கிடைத்த ஒரு விருதாக இதனை நாம் பார்த்தல் வேண்டும்.
இந்த விருதில் நாம் சொந்தம் கொண்டாட இயலாது என்றாலும், நமது சங்கத்தின் வழிகாட்டியாக சீரிய முறையில் செயல்படும் அவருக்கு கிடைத்த இந்த பெருமையில் நாமும் உடன் நின்று மகிழ்கிறோம்.
உதவித் தலைவர் சரியாக குறிப்பிட்டது போல் பன்முகத் திறமை கொண்ட தகைசால் நபரான இவருக்கு இன்னும் பற்பல விருதுகள் கொடுக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசையும் நம்பிக்கையும் ஆகும்.
விரைவில் நமது ஆசைகள் நிறைவேறட்டும்.
சாய்ராம் ஐயாவிற்கு இன்னும் பற்பல பெருமைகள் வந்து சேரட்டும்.
மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் தனது தலைமகனை பாராட்டி மகிழ்கிறது.
- ஸ்ரீவி
==================
*குணசித்திர நடிகர் மட்டுமா?*
அதுவும் அரசின் அங்கீகாரம்… பெருமைதான்!
ஆனால் மனம் கேட்கிறது,
அரசே! இதோ இன்னும் பல அங்கீகாரங்கள் வரிசையில் நின்றுக்கொண்டிருக்கிறதே… அவை எங்கே?
*சிறந்த பன்முகக் கலைஞர்*
ஒரே மேடையில் பல முகங்கள், ஒரே மனிதனில் பல திறமைகள்!
*சிறந்த ஹைக்கூ கவிதை மன்னர்*
மூன்று வரிகளில் முழு உலகை அடக்கும் மந்திரம் உங்களுக்கே உரியது!
*நாடக ஆசிரியர் & இயக்குநர்*
வார்த்தைகளால் காட்சியை உருவாக்கி, காட்சிகளால் மனதை ஆளும் வல்லமை!
*நிர்வாகத் திறனாளர்*
மேடைக்கு முன்பும் பின்னும் ஒழுங்கும் ஒற்றுமையும் உருவாக்கும் தலைமைச் சக்தி!
*பாடகர்*
குரலில் உணர்வு, உணர்வில் உயிர்!
அதனால் தான் கேட்கிறோம்…
*எங்கே… எங்கே… எங்கே…?*
இந்த அங்கீகாரங்கள் எல்லாம் இன்னும் வரிசையில் தானோ?
இன்று சிறந்த குணசித்திர நடிகர்
நாளை பல்திறன் கலைஞரின் முழுமையான அரசு அங்கீகாரம்!
இந்த விருது
*ஒரு தனி மனிதருக்கானது அல்ல…*
*நம் மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் பெருமை* 😂
நம் அனைவரின் மகிழ்ச்சி!
மேலும் மேலும் உயரங்களைத் தொட வாழ்த்துகள்…
இது தொடக்கம் மட்டுமே! 🌸
- தியாகராஜன்
---------------
தமிழ்ச் சங்க சொத்தே !
வணக்கம் வணக்கம் போட்டு வாய்ப்பு தேடாதவர்
வந்த எதையும் மிளிர வைக்காமல் விடாதவர்
இணையான குயில் ஒன்று தேர்வு செய்தவர்
இசை, இசை, இசை என்றே சுவாசிப்பவர்
கணக்காகத் தமிழ்ச் சங்கச் செலவுகள் செய்வீர்
கைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வீர்
" குணசித்திர நடிகர் " விருதோ இன்னொரு முத்தே
கொடுத்து வைத்தோம் சாய்ராம் ஐயா! சங்க சொத்தே!
மேலும் ம் பல சிகரங்கள் காத்திருக்கின்றன ஐயா! 💐🙏
__. குத்தனூர் சேஷுதாஸ் 30/1/2026
No comments:
Post a Comment