என்றோ ஒரு நாள் தம் குஞ்சுகளெல்லாம் சிறகுகளை விரித்துப் பறந்து செல்வதை
வாயிலில் நின்று
வேதனை கலந்த பெருமிதத்துடன்
வேடிக்கை பார்க்கத்தானே
இத்துனை நேர்த்தியாய் கூட்டினை
கட்டிக் கொண்டிருக்கிறது இந்த தாய்ப்பறவை...
என்றோ ஒரு நாள்
வானத்து வீதிகளில்
மீண்டும் சந்திக்கும்
வாய்ப்பு கிடைத்தால்
தன் படைப்புகளை உரசாமல்
வாஞ்சையோடு வருடிச் செல்ல
வாசம் பழகிக் கொள்ளவே
இந்த வீடு...
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment