*மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை!!!*
*ஆசிரியர்:*
நாம் ஏன் மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தில் இணைய வேண்டும்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
*மாணவன்:*
ஹ்ம்ம்… தமிழை வளர்க்கத்தான்…
*ஆசிரியர்:*
(சிரித்தபடி, சிறிது கிண்டலுடன்)
ஹ்ம்ம்… “செம்மொழி”ன்னு சொல்கிறோம்… அதை நாம் வளர்க்கப் போகிறோமா?
*மாணவன்:*
ஹ்ம்ம்… ல்ல ல்ல… தமில சாகாம காப்பாத்தரத்துக்கு…
*ஆசிரியர்:*
(சிரிப்பை அடக்கிக்கொண்டு)
ஐயோ! நீ பேசாமல் இருந்தாலே போதும்… தமிழுக்கு ஒன்றும் ஆகாது!
*மாணவன்:*
அப்போ எதுக்குத்தான் எல்லாரும் சேரணுன்னு நீயே சொல்லு வாத்தியாரே!
*ஆசிரியர்:*
(அமைதியான குரலில்)
அப்படிக் கேள்… ஒரு விளக்கு அணையக்கூடாதென்று… அதை ஒரு குடத்துக்குள் வைத்தால்…
அதன் வெளிச்சம் யாருக்காவது பயன் தருமா?
*மாணவன்:*
(உடனே)
தராது!
*ஆசிரியர்:*
அதே விளக்கை கண்ணாடியால் மூடினால்?
*மாணவன்:*
அட ஆமாம்! இப்ப வெளிச்சம் நல்லா தெரியும்!
*ஆசிரியர்:*
அதில் ஒரு பிரதிபலிப்பானையும் வைத்தால்?
*மாணவன்:*
பிரதிபலிப்பானா? அதென்ன?
*ஆசிரியர்:*
(சிரித்தபடி)
அதான்… *Reflector!*
*மாணவன்:*
(மிகுந்த உற்சாகத்தில்)
ஐயா! அருமை! இப்ப அந்த வெளிச்சம் பலருக்கும் பயன் படும்!
*அருமை! அற்புதம்! உன்னதம்!*
*ஆசிரியர்:*
பார்த்தாயா… *இப்போது நீயே எவ்வளவு அழகான தமிழில் பேசுகிறாய்!*
*இதைத்தான் மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் செய்கிறது!*
*மாணவன்:*
இன்னும் கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள் ஐயா…
*ஆசிரியர்:*
அவர்கள் யாரையும் புதிதாக உருவாக்குவதில்லை… ஆனால்,
திறமை இருந்தும் முடங்கி இருப்பவர்களை… வாய்ப்பு இல்லாமல் மறைந்து இருப்பவர்களை…கண்டுபிடித்து…
*பயிற்சி* என்ற *பிரதிபலிப்பானால்…*
அவர்களின் *ஒளியை…*
*உலகமே உணருமாறு செய்கிறார்கள்!*
*மாணவன்:*
ஆகா ஆகா! இந்த வாய்ப்பு இவ்வளவு நாள் தெரியாம போயிடுச்சே! 😱
நான் இவ்வளவு நாள் எங்க இருந்தேனோ!
*ஆசிரியர்:*
*அறிவுக்கு வழி தெரியும் தருணம் தாமதமாக வந்தாலும் அது வீணாகாது…*
*மாணவன்:*
(உற்சாகமாக)
ஐயா! இப்போ நான் என்ன செய்யணும்? *எப்படி சேரணும்?*
*ஆசிரியர்:*
தெளிவாக, இப்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது…
ஒரு *1200 ரூபாய் Google Pay* செய்து… அதன் திரைப்பிடிப்பை எடுத்து…
*உன் பெயரையும்…* *கதவிலக்கத்தையும் சேர்த்து…*
*அவர்களது நிதிச்செயலாளருக்கு அனுப்பு…*
மீதியெல்லாம்… அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்!
*மாணவன்:*
ஐயா! நிச்சயமாக நான் சேர்றேன்!
நானும் அந்த *ஒளியில் ஒரு சிறு தீபமாவேன்!*
*ஆசிரியர்:*
*ஒளி பகிர்ந்தால் தான் பெருகும்…*
*வாருங்கள், அனைவரும் தமிழ்ச்சங்கத்தில் சேரலாம்.*
No comments:
Post a Comment