Monday, April 13, 2026

மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் உங்களை வரவேற்கிறது

 *மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் உங்களை வரவேற்கிறது*


*நீங்கள் ஏன் மகாகவி பாரதிச் சங்கத்தின் உறுப்பினராக வேண்டும்? தவறாமல் இந்தப் பதிவை படியுங்கள்!. நல்ல முடிவினை எடுங்கள்!!*


கடந்த மூன்று ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நமது மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் நமது பூர்வா குடி வாசிகளுக்கு மேடை தருவதில் முன்னணியில் நிற்கிறது. எப்படி என்று தெரிய வேண்டுமா! இதுவரை நாம் நடத்திய நிகழ்ச்சிகளை சிறிது பின்னோக்கிப் பார்ப்போம்: 


*மெல்லிசை நிகழ்ச்சிகள்/பாடல்கள்*: 50க்கும் அதிகமான பூர்வா மக்கள் முறையாக பயிற்சி கொடுக்கப்பட்டு மேடை ஏறி பாடியுள்ளனர். 


*பட்டிமன்றங்கள்*: இதுவரை ஐந்து

நடந்துள்ளன. அவற்றில் 35 க்கும் அதிகமானோர் முறையான பயிற்சிக்குப் பின் மேடை ஏறி தங்கள் திறமைகளை நிரூபித்துள்ளனர். 


*பேச்சரங்கம்*: பேச்சரங்க நிகழ்ச்சிகளில் 20க்கும் மேற்பட்ட பெரியவர்களும் 30-க்கும் அதிகமான சிறார்களும் பங்கேற்று சிறப்பித்து உள்ளனர். 


*சொல்வேந்தர் மன்றம்*: பட்டிமன்ற/ பேச்சரங்க பேச்சாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவிடவும் முறையான பயிற்சி கொடுத்திடவும் சொல்வேந்தர் மன்றம் பல வாரங்கள் தொடர்ந்து நடத்தப் பட்டது.


*கவியரங்கம்* இதுவரை நடைபெற்ற நான்கு கவியரங்கங்களில் 30க்கும் அதிகமான கவிஞர்கள் தங்கள் கவிதைகளை படைத்து அளித்துள்ளனர்.  இதில் குறிப்பிடத்தக்கது *ழகரக் கவியரங்கம்*


*மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்* 3 வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன


*நாடகம் / திரை நாடகங்கள் (telefilms)*: இதுவரையில் இரு நாடகங்கள் அரங்கேற்றப் பட்டுள்ளன. இரு திரை நாடகங்கள் (குறும்படங்கள்) எடுக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக ஒரு தொடர் திரைநாடகம் தயாரிக்கப் பட்டு வருகிறது. இவற்றின் நாடக ஆசிரியர்கள், இயக்குனர் உதவி இயக்குனர் கேமரா முதற்கொண்டு பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் நமது உறுப்பினர்களே.


*தமிழர் பெருமையை பறைசாற்றும் சிலம்பம் வில்லுப்பாட்டு பாரம்பரிய விளையாட்டுகள்* நடத்தப் பட்டுள்ளன 


*பாடல் நிகழ்ச்சிகளும் பாரம்பரிய உடை அணிவகுப்பும்* மகளிருக்காக நடத்தப்பட்டுள்ளன


இளைஞர்களை கவரும் வகையில் *பாரதி கிரிக்கெட் போட்டி* சிறப்பாக நடத்தப்பட்டது அதில் 14 அணிகள் கலந்து கொண்டன. இரண்டாவது போட்டி மே மாதம் நடத்த திட்டம் தயாராக உள்ளது. 


• இதுவரை நமது புலனக் குறிப்பில் தங்கள் படைப்புகளை பகிர்ந்து வந்தவர்கள் பலரின் படைப்புகளை தொகுத்து இரண்டு முறை கையேடுகள் வெளியிடப் பட்டுள்ளன. *ழகர கவியரங்க* கவிதைகளை ஒரு நூலாக கொணர்ந்திருக்கிறோம். நம்முடைய கவிஞர்கள் கதாசிரியர்கள் எழுதிய நூல்கள் நமது மேடைகளில் வெளியிடப்பட்டுள்ளன இதுவரையில் *மூன்று நூலாசிரியர்கள்* நம்மிடையே உருவாகியுள்ளனர். அதற்கு நம் தமிழ்ச் சங்கம் வழிகாட்டி உள்ளது. 


• செஞ்சி தமிழ்ச்சங்கம், தமிழ்க் கூடல் போன்ற மேடைகளில் நமது பேச்சாளர்கள் நமது சங்கத்தின் பெருமையை நிலைநாட்டி உள்ளார்கள். 


• கல்ப விருக்ஷா எனும் பள்ளியின் மேடையில் நமது சங்கச் செயலர் மலர்விழியின் மைந்தன் - இளம் திறமையாளன் கௌசலேஸ் இரண்டு முறை கௌரவ விருந்தினராக வர வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட நிகழ்வு நமது சங்க மணி மகுடத்தில் ஒரு வைரமாக ஒளிருகிறது.


• நமது பூர்வாவின் நலச்சங்கம் நடத்திய பொங்கல் நிகழ்ச்சியில் நமது சங்கத்தின் பட்டிமன்ற குழு மேடை ஏறி மிகச் சிறப்பான பட்டிமன்றத்தை நடத்தி அனைவரையும் மகிழ்வித்து அவர்களின் பாராட்டுகளை பெற்று இருக்கிறது.    


• மாதம் இருமுறை வாசித்தலை ஊக்குவிக்க *வாசிப்பு அரங்கம்* நடத்தப்பட்டு வருகின்றன. கதைகள் படிக்கப்பட்டு அதன் மீது கலந்துரையாடல் நடக்கிறது   


 • *இலக்கண வகுப்பு* மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது


நமது நிகழ்ச்சிகள் அனைத்தும் நமது *யூ ட்யூப் (youtube) சேனலில்* பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒரு *பட வரிக் குழு (Instagram)* துவக்கப்பட்டு, அதில் சிறு காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றன. நமக்கென ஒரு *வலைப்பதிவு தளமும் (blogspot)* உருவாக்கப்பட்டு அனைத்து படைப்புகளும் அதில் பகிரப்படுகின்றன


நமது சாதனை பட்டியலில் நீளம் இன்னும் அதிகம்.

சில முக்கிய விடயங்களை மட்டும் இங்கு நாங்கள் பட்டியலிட்டு இருக்கிறோம்.


உங்கள் இடையேயும் திறமைகள் பல ஒளிந்து இருக்கும். ஆர்வமும் நிறைய இருக்கும். நீங்களோ உங்கள் குடும்பத்தினரோ உங்கள் இல்லத்துப் பிள்ளைகளோ இதைப்போல பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டுமா? 


*உடனே நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தில் உறுப்பினராக இணையுங்கள்*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...