முருகதாஸ் ஐயா ! (இரங்கல்)
முருகதாஸ் என்னும் அங்கி அது கழன்றது
மோக்ஷம் அழைத்தது, ஆன்மா நுழைந்தது
கருவில் திருவுடையாரைக் கையால் எண்ணலாம்
கடலின் நல் முத்தாக அங்கங்கே மின்னலாம்
வருவார், போவார் உலகில் எண்ணிறந்த ஒன்று
வாழ்வார் மனதில் சிலரே நீரும் அதிலொன்று
தருவின் கீழ் கோயில்கள் என்ற உம் எண்ணம்
தந்திமுகன், அனுமன் சன்னதிகள் கண் முன்னம்
திருவிழா, பண்டிகை ஒன்றும் விடவில்லை
திறமையாக முன்னின்று நடத்தினீர் ஐயமிலை
உரிமைக்கும் குரல் கொடுத்தீர் அவ்வப்போது
உம் அகராதியில் இலாதது "முடியாது" என்பது
பெருமையாம் எம்மிடையே நீர் வாழ்ந்தது
பொதுப்பணியும் நீர் இலாமல் அன்றேது ?
கருமமே கண்ணான முருகதாஸ் ஐயா!
கால அலை அழிக்காத கோலம் நீர் ஐயா!
__. குத்தனூர் சேஷுதாஸ் 3/4/2026
No comments:
Post a Comment