••••••••••••••••••••••••••••••••••••
*புத்தனும் புறாக்களும்*
••••••••••••••••••••••••••••••••••••
போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில்
உலக அமைதியோ
தடுமாறி தத்தளிக்க
ஆசையை துறக்கச் சொல்லியும்
அன்பை வளர்க்கச் சொல்லியும்
உலகோருக்கு போதித்த
புத்தனைச் சுற்றி
அமைதியின் சின்னமாம் வெண்புறாக்கள்
படபடத்து சிறகடித்து சுற்றிச் சுற்றி பறந்து வந்து
ஓலமிட்டு அலறுகின்றன அமைதி வேண்டி கதறுகின்றன
வல்லூறுகள் காதில் விழுந்திடுமா?
உலக அமைதியும் திரும்பிடுமா!
*உங்கள் தோழன் ஸ்ரீவி*
No comments:
Post a Comment