காவல் நிலையத்தில்...
கதிரவனைக் காணவிலை இருநாளாய் எங்கும்
காவல் நிலையமதில் தந்தோம் புகாரும்
அதிகாலை நாள்தோறும் விழித்தெழுவான்
அனைவரையும் வழியில் விழிக்கச் செய்வான்
சதி நிறைந்த இருளதை ஒட்டி விடுவான்
சக்கையாய் நமைப் பிழிந்து வாட்டுவான்
கொதிக்கும் தேநீர்,:காஃபி குடிக்கச் சொல்வான்
கூடவே வேறு சில சுவைக்கவும் செய்வான்
கொழிக்க பயிர்களைத் தழைக்கச் செய்வான்
கோயில் மணி, கோழியை "அறிவி" என்பான்
" வழிபடு இறைவனை " அதையும் சொல்வான்
வயிறு அது குறைய நடக்கவும் செய்வான்
தொழில்கள் பல உலகில் தொடங்க வைப்பான்
துரத்தி பணம் நோக்கி ஓடவும் செய்வான்
குழந்தை அவன் பற்றிய விவரங்கள் இவைதாம்
கொஞ்சம் தயவு பண்ண கண்டு பிடித்து விடலாம்.
__. குத்தனூர் சேஷுதாஸ் 12/1/2026
No comments:
Post a Comment