Tuesday, April 21, 2026

உலக மொழிகள் பற்றிய ஒரு ஆய்வு

 உலக மொழிகள் பற்றிய ஒரு ஆய்வு 


மனித இனப் பரிணாம வளர்ச்சியின் சிறப்புகளுள் ஒன்று மொழி.


உலகில் பல மொழிகள் உள்ளன. இவற்றுள் சில மொழிகள் மட்டுமே பேச்சு வடிவம், எழுத்து வடிவம் ஆகிய இரண்டையும் பெற்றுள்ளன.


உலக மொழிகளுள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே. 


உலகெங்கும் பேசப்படும் மொழிகள் -19,000


இந்தியாவில் மட்டும் பேசப்படும்

மொழிகள் -6000


ஆனால் உலகிலேயே

எழுத்தும்,

இலக்கணமும்,

இலக்கியமும், வயது மூப்பும், தொன்மையும், இளமையும் மற்றும்

நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட செம்மொழிகள் ஆறு மொழிகள்தான்.


அவை


1.தமிழ்: 

  Thamizh

மிகத் தொன்மையான,

இலக்கிய நயம்கொண்ட,

எழுத்துவடிவம் கொண்ட இன்றுவரை வாழும் ஒரே செம்மொழி.

உலகின் மூத்த மொழியும் இதுவே.


2.சமஸ்கிருதம்:

Sanskrit 

இந்திய துணைக்கண்டத்தின், தமிழுக்கு அடுத்த

தொன்மையான இலக்கிய மொழி.தற்போது

பேச்சுவழக்கில் இல்லை.


3.சீனம் (Chinese):

பழமையான கலாச்சாரம் மற்றும் எழுத்துவடிவம் கொண்டது.


 4.கிரேக்கம் (Greek):

ஐரோப்பிய இலக்கியம் மற்றும் தத்துவத்தின் அடிப்படை மொழி.


 5.இலத்தீன் (Latin): 

ரோமானிய பேரரசின் மொழி (தற்போது வழக்கத்தில் குறைவு).


 6.ஹீப்ரு ( Hebrew/எபிரேயம்): இஸ்ரேலின் தொன்மையான, புத்துயிர் பெற்ற மொழி. 


இவை ஆறும் உலக மொழி அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட செம்மொழிகள் (Classical languages) ஆகும்.


இவை தொடர்ச்சியான மரபு மற்றும் உயர்தர இலக்கியத் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை. இவற்றுள் சமஸ்கிருதம் மற்றும் இலத்தீன் மொழிகள் பெரும்பாலும் இலக்கிய மற்றும் சமய வழக்குகளில் மட்டுமே உள்ளன, மற்றவை பேச்சு வழக்கிலும் உள்ளன. 


தமிழ் மொழி 2500 ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் இருக்கும் செம்மொழியாகக் கருதப்படுகிறது.


தமிழ், கிரேக்கம், ஹீப்ரு மற்றும் சீனம் ஆகியவை மில்லியன் கணக்கான மக்களால் இன்றும் பேசப்படும் உயிர்ப்புள்ள செம்மொழிகளாக உள்ளன.


இவற்றிலும் தொடர்ச்சியோடு கூடிய இளமையும்,செழுமையும்,மேன்மை கொண்ட பேச்சி மொழிகள் தமிழும் சீனமும் மட்டுமே.


இவ் இரண்டிலும்

தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை. 


பெரும்பாலான செம்மொழிகள் வழக்கில் இருந்து நீங்கி விட்டன. அவை பேச்சு வழக்கில் கூட இல்லை.


ஆனால், தமிழ்மொழியின் பண்பாடு, சிறப்பு அழியாமல் இன்றளவும் காக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு முக்கிய காரணம் தமிழ் மொழியின் கட்டமைப்பு ஆகும்.


பொதுவாக செம்மொழி தகுதி பெறுவதற்கு 11 கூறுகள் உள்ளது.அவையாவன ...


1.தொன்மை

2.தனித்தன்மை

3.பொதுமைப்பண்பு

4.நடுவு நிலைமை

5.தாய்மைப் பண்பு

6.கலை பண்பாட்டுத் தன்மை

7.தனித்து இயங்கும் தன்மை

8.இலக்கண, இலக்கிய வளம்

9.கலை இலக்கியத்தன்மை

10.உயா்சிந்தனை

11.மொழிக் கோட்பாடு


மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பண்புகளும் தமிழுக்கு உண்டு.


தமிழை புலவா்களும், மன்னா்களும் வளா்த்தாலும் அவா்கள் மறைந்த போதிலும் தமிழ் மொழி இன்னும் காப்பற்றப்பட்டு வருகிறது.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற நூல்கள் தமிழில் உள்ளது.


இதன் வாயிலாக தொன்மைச் சிறப்பு வாய்ந்தது தமிழ் என்பதை உணர முடிகிறது.


தமிழ் செம்மொழி என உணா்ந்திய தமிழறிஞா்களுள் குறிப்பிடத்தக்கவா்கள். பாிதிமாற்கலைஞா், பாவாணா், காா்டுவெல் போன்ற பலா் ஆவா்.


இவ்வகையில் பல அறிஞா்கள் தமிழின் செம்மொழித் தன்மையை உலகிற்கு எடுத்துரைத்துள்ளனா்.


இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக செம்மொழி அந்தஸ்து பெற்ற முதல் மொழி தமிழ் ஆகும். (2004-ல் அறிவிக்கப்பட்டது). 


 *அக்ரி சா.இராஜா முகமது

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...