••••••••••••••••••••••••••••••
*தன் கையே தனக்குதவி*
••••••••••••••••••••••••••••••
வயது முதிர்ந்து நடையும் தளர்ந்து
வாழ்க்கைப் பயண களைப்பும் மிகுந்து
ஊன்றுகோலே மூன்றாம் காலாய்
ஆன நிலையிலும் மனம் தளராது
உச்சி வெயில் மண்டையைப் பிளக்க
உடம்பில் வியர்வை ஆறாய்ப் பெருக
ஆளை அசத்தும் வெயிலிலே
சாலை நடுவே போவது யார்?
யாரையும் நம்பி வாழ்ந்திடாமல்
ஊரார் உதவியை வேண்டிடாமல்
கார்கள் ஓடும் வீதியிலே
பழங்கள் விற்று வாழ்ந்திடுவார்!
விதியின் மேலே பழியைப் போட்டு
விட்டு விலகிய உறவினைத் தூற்றி
இரந்துண்டு வாழ்ந்திடாமல்
கடுமையாக உழைத்திடுவார்!
உள்ள உறுதி இருந்திட்டால்
உடலின் தளர்ச்சி
பொருட்டல்ல
கள்ள கபடம்
செய்து வாழ்தல்
வாழ்வியல் கூறும் நெறி அல்ல.
உடல்நிலை தளர்ந்தும்
உள்ளம் தளரா
உழைப்பாளியை
நாமும் வணங்கிப் போற்றிடுவோம்
நாளும் நாளும் புகழ்ந்திடுவோம்!
*உங்கள் தோழன் ஸ்ரீவி*
No comments:
Post a Comment