ஏப்28 ~
தமிழ்த்தாத்தா நினைவேந்தல்
■◆■◆■◆■◆■◆■◆■◆■
அடுப்பெரிக்க,
போகித் தீயிலிட,
கரையான் அரிக்க,
ஈரத்தில் மக்கிப் போக
மட்டும் பயன்பட்ட
தமிழ் பேரிலக்கிய
ஓலைச் சுவடிகளைச்
சோர்வுறாது
நாடித் தேடி ஓடியோடி
சேகரித்து,
அயராது
அவற்றை அச்சேற்றி
தமிழன்னைக்கு
அளப்பரிய சேவை செய்த
தமிழ்த் தாத்தா
உ.வே. சாமிநாத ஐயர்
இப்பூவுலகை நீத்த
தினமின்று!
அவர்தம்
நினைவேந்துவோம்!
அவர்தம்
சேவையைப் போற்ற
வணங்கி மகிழ்வோம்!!
உங்கள்_தோழன்_ஸ்ரீவி
No comments:
Post a Comment