நற்சுனை 27
எனக்குள் ஒருத்தி....
தனக்கொரு நீதி
பிறர்க்கொரு நீதி
"அ" கரம் ஒட்டிக் கொண்ட நீதி
சமுதாயம் ஏற்றுப் பழகிய விதி
தராசுத் தட்டு இறங்கிப் போன கதி
நியதி மறந்துவிட்ட மதி
யாரைப்பற்றி இந்த சேதி?
பரிதிக்கு புழுதி போர்த்திவிடுபவளாய்
பசுமைக்கு கருமை பூசிவிடுபவளாய்
சுட்ட பின்னும் வெண்மை தராத சங்காய்
நான் இழைக்கும் அநீதியை
நியாயப்படுத்தும் வாதாளராய்
எனக்குள்ளேயே ஒருத்தி ...
மனசாட்சியின் குரல்வளையை
வெடித்துப் பறந்த பருத்தி...
.
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment