*வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு (ஏழாம் அமர்வு) விவரணம்*
நமது தமிழ்ச்சங்கம் நடத்தும் வாசிப்பு வட்டம் 20.12.25 சனி மாலை 5 மணிக்கு கார்ட்ஸ் அறையில் துவங்கியது.
முதலில் சிறார்களுக்கான வாசிப்பு வட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட சிறார்கள்:
ஜனனி,
ஆராதனா,
வர்ஷா,
வருண்,
இளமாறன்,
கௌசலேஸ்,
ஸ்ரீராம்,
அவினாஷ்,
லக்ஷித்,
சாம்,
ரித்விக்,
சாய் பிரணவ்
கலந்து கொண்ட சிறார்களை இரு குழுக்களாகப் பிரித்து, ஒரு புதிய செயல் திட்டத்தை தேவி அருண் அவர்களும் மகாலட்சுமி அவர்களும் நடத்தினார்கள். இரு அணியில் இருந்தும் ஒருவர் வந்து சீட்டுகளை இரண்டு கட்டுகளிலிருந்து எடுத்து அதில் காணப்படும் பெயர்ச்சொல் மற்றும் வினைச் சொற்களை வைத்து குழுவாக அமர்ந்து ஒரு கதையை எழுத வேண்டும் என்பதே அந்த செயல் திட்டம்.
குழந்தைகளுக்கான வாசிப்பு வட்டம் :
அணி 1 : *அடேங்கப்பா ஆறு பேரு*
பங்கேற்ற குழந்தைகள் :
ஸ்ரீநிகேதன்
சாம்
லக்ஷித்
வருண்
ஸ்ரீராம்
ருத்விக்
கதை : *சிறுவன் ஒருவன்*
அணி 2: (jolly Friends) *மகிழ் தரு நண்பர்கள்*
பங்கேற்ற குழந்தைகள்:
கௌசலேஷ்
ஜனனி.அ
வர்ஷா
இளமாறன்
சாய் பிரணாவ்.
செ சு. வ. அவினாஷ்
கதை : *அப்பா பிள்ளை பாசம்*
ஒவ்வொரு அமர்விலும் ஒவ்வொரு புதிய புதிய செயல் திட்டத்துடன் வரும் அமைப்பாளர்களை நிச்சயமாக பாராட்ட வேண்டும். நீங்கள் எந்தவிதமான செயல் திட்டங்கள் கொடுத்தாலும் அதனை மிகச் சிறப்பாக செய்து நாங்கள் கதைகளை எழுதி வாசிப்போம் என்று சவால் விடும் சிறார்களும் அமர்வினை மிளிரச் செய்கிறார்கள்.
இந்த *சவாலே சமாளி* போட்டி மிக விறுவிறுப்பாக ஒவ்வொரு அமர்விலும் நடப்பது தமிழ்ச் சங்கத்தை பெருமை கொள்ள வைக்கிறது.
அதன் பின் பெரியோர்களுக்கான வாசிப்பு வட்ட அமர்வு துவங்கியது. அதில் கலந்து கொண்டோர்:
ஸ்ரீவி,
மகாலட்சுமி,
காமாட்சி, தியாகராஜன், அமுதவல்லி,
தேவி அருண், முகமது சுலைமான், மலர்விழி மற்றும் சண்முகசுந்தரம்.
இந்த அமர்வில் *சுஜாதா எழுதிய கதை தொகுப்பான கம்ப்யூட்டர் கதை சொல்கிறது* என்ற நூலில் இருந்து *ஒரு கதையில் இரு கதைகள்* எனும் கதையை நல்ல குரல் வளத்தோடு ஏற்ற இறக்கங்களோடு மிகச் சிறப்பாக தேவி அருண் வாசித்தார். அதனை ஒட்டி சுஜாதா பற்றியும் அந்த கதை பற்றியும் அமர்வில் இருந்த உறுப்பினர்கள் தத்தம் கருத்துகளை பதிவு செய்தார்கள். நேரம் போவது தெரியாமல் அவர்களின் உரையாடல் மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற்றது. கதையை மிக நன்றாக வாசித்த தேவி அருணுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.
நேரமின்மை காரணமாகவும், குறைந்த உறுப்பினர்களே இருந்த காரணத்தாலும் இலக்கண வகுப்பு ஆசிரியருக்கு நியாயம் கிடைக்காது என்கின்ற அடிப்படையில் இந்த முறை அனைவரின் கருத்துக்களின் அடிப்படையில் வகுப்பு எடுக்கப்படவில்லை. இது மிகவும் வருத்தத்திற்குரியது. திரு. சண்முகசுந்தரம் அவர்கள் மிகுந்த முயற்சி எடுத்து மிகச் சிறப்பாக தயாரித்து வகுப்புகளுக்கு வருகிறார். அவரது உழைப்புக்கேற்ற அங்கீகாரம் நமது பெருவாரியான உறுப்பினர்களின் தொடர் வருகை மட்டுமே கொடுத்திட இயலும். இதனை நாம் அனைவரும் மனதில் நிறுத்திக் கொள்வது நல்லது.
No comments:
Post a Comment