••••••••••••••••••••••••••••
*இரவில் நகர் உலா*
•••••••••••••••••••••••••••••
பால் போல வெண்ணிலா
பவனி வருது வானிலே
பகல் போல தன்னொளியை
பரப்புது பார்
ஊரிலே
வெண்ணிலவின் ஒளியினிலே
அமைதி நிலவும் வீதியிலே
தம்பி தங்கையரின் கரம் பிடித்து
தென்னங்கீற்று சலசலக்க
வீசும் தென்றலை இரசித்த படி
காலாற நடத்தல் பேரானந்தமே.
அனுபவித்தோர்
ஆம் என்பர்
மற்றோரெல்லாம் யோசிப்பர்.
குளிர் நிலவை ரசித்தபடி
நகர் உலா போவோமா நாம்!
*ஶ்ரீவி*
No comments:
Post a Comment