*டிசம்பர் 13 மகாகவி பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சிகள் விவரணம்*
*மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்*
சரியாக ஐந்து நாற்பத்தைந்து மணி அளவில் நமது மகாகவி பாரதியின் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சிகள் இனிதே துவங்கியது. முதல் நிகழ்ச்சியாக குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பண்ணிசைக்கப் பட்டது. சிறப்பானதொரு வரவேற்புரையை திரு என் கணேசன் வழங்கினார்.
பின்னர் தொகுப்பாளர் காமாட்சி அவர்கள் உரையாடலாம் வாங்க நிகழ்ச்சியை நடத்த நெறியாளர் திரு சண்முகசுந்தரம் அவர்களை அழைத்தார். முதலில் அக்கினி குஞ்சுகள் அணி மேடை ஏறியது.
அந்த அணியில் இடம் பெற்றோர்:
மலர்விழி,
லக்ஷித்,
கிருத்திகா,
திரு விக்ரம்
மற்றும் தேவி அருண்.
பங்கேற்பாளர்களின் சுய அறிமுகத்தோடு துவங்கிய அணியின் பங்களிப்பு சண்முகசுந்தரம் ஐயா கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் ஒரு நல்ல கலந்துரையாடலாக அமைந்திருந்தது.
பாரதி என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது எது, பாரதிக்கு தேசியக் கவி பட்டம் வழங்க வேண்டும் என கருதுகிறீர்களா, பாரதியின் புதிய ஆத்திசூடி பற்றி ஏதேனும் ஒரு தலைப்பில் கூறவும்
என ஒன்றன்பின் ஒன்றாக சண்முகசுந்தரம் ஐயா வினவ பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக மிக அருமையாக பதில் அளித்த விதம் அரங்கை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பல புதிய தகவல்களை எடுத்தியம்பியது. தேசிய அளவிலான அங்கீகாரம் பாரதிக்கு கிடைக்க வேண்டும் என்கின்ற அவா வெளிப்பட்டது.
இரண்டாவது அணியாக புதுமைப் பெண்கள் அணி மேடை ஏறியது. இதன் பங்கேற்பாளர்கள்:
ஸ்ரீவித்யா,
லலிதா கிருஷ்ணன், மல்லிகாமணி, சாதனா ஸ்ரீ,
மற்றும் அனிதா பாரதி.
இவர்களிடம் நெறியாளர் பாரதியின் பாடல்களில் உங்கள் மனதிற்கு நெருக்கமான பாடல் எது, பாரதியின் பாடல்கள் பல பிரபலமாவதற்கு திரைப்படங்கள் முக்கிய காரணமா, பாரதியின் பாடல்களைப் போல அவரது வசன கவிதை பிரபலமாகவில்லையே ஏன் எனும் கேள்விகளோடு புதிய ஆத்திசூடி பற்றியும் வினவினார்.
இந்த அணியில் அனைவரும் பெண்களாக இருந்தது புதுமைப் பெண்கள் என்கின்ற பெயருக்கு பொருத்தமாக இருந்தது. அனைத்து பெண்களும் மிகச் சிறப்பாக தத்தம் பதில்களை கூறினர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு இவர்களும் வலு சேர்த்தனர்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக மூன்றாவது அணி பாரதியின் செல்லம்மாக்கள் மேடைக்கு வந்தனர்.
இந்த அணியில் பங்கு பெற்றவர்கள்:
அர்மான்,
சுல்தானா,
அர்ஃபா,
அமுதவல்லி, மோகன் ஐயா.
இவர்களுக்கு பாரதியின் பாடல்களில் அவர்களுக்கு பிடித்த பாடல் எது, அடுத்த தலைமுறைக்கு பாரதியை எடுத்துச் செல்ல தமிழ் சமூகம் தவறி இருக்கிறதா அல்லது வெற்றி பெற்றிருக்கிறதா, புதிய ஆத்திசூடி பாரதி புகழ்ந்து பாடிய திருவள்ளுவர் கம்பன் இளங்கோ வரிசையில் பாரதியும் இடம்பெறுவாரா ஆகிய வினாக்கள் முன்வைக்கப்பட்டன.
பிற இரண்டு அணிகளைப் போலவே இவர்களும் தங்களது சிறந்த பதில்களை அவை என் முன் வைத்தனர் மிக நிறைவான பதில்களாக அவையெல்லாம் அமைந்திருந்தன.
உரையாடலாம் வாங்க நிகழ்ச்சியில் பகிரப்பட்ட புதிய ஆத்திசூடி வரிகள் அணி வாரியாக:
*அக்னிக் குஞ்சுகள் அணி*
1. கிருத்திகா - தையலை உயர்வு செய்
2. திரு விக்ரம் - ஊண்மிக விரும்பு.
3. லக்ஷித் - ஈகை திறன்
4. மலர்விழி - நேர் பட பேசு
5. தேவி - வானநூற் பயிற்சிகொள்
*புதுமைப் பெண்கள் அணி*:
1. ஸ்ரீவித்யா: ஞாயிறு போற்று
2. சாதனா ஸ்ரீ: தேசத்தைக் காத்தல் செய்
3. அனிதா பாரதி: உடலினை உறுதி செய்
4. மல்லிகாமணி: மேழி போற்று
5. லலிதா கிருஷ்ணன்: ஒற்றுமை உயர்வு
*பாரதியின் செல்லம்மாக்கள்:*
1. அர்ஃபா: விதையினைத் தெரிந்திடு
2. மோகன்: வௌவுதல் நீக்கு
3. அமுதவல்லி: புதியன விரும்பு
4. அர்மான்: நூலினை பகுத்துணர்
5. சுல்தானா:லீலை இவ்வுலகு
பெண் தலைவர் ஸ்ரீவி அவர்களும் உதவித்தலைவர் தியாகராஜன் அவர்களும் பாரதி தின சிறப்பு நிகழ்ச்சி திட்டமிடல் பற்றியும் ஆயத்தப் பணிகள் பற்றியும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்கள்.
நிதிச் செயலர் சாய்ராம் அவர்கள் எங்கெங்கு காணினம் பாரதி எனும் குறும்படம் தயாரிப்பு பற்றி எழுத்தாக்கம் செய்த சுல்தானா இயக்கி ஒளிப்பதிவு செய்த தேவி அருண் ஆகியோரைப் பற்றியும் நடித்த சிறார்கள் பற்றியும் குறும்படம் எடுக்கப்பட்ட விதம் பற்றியும் உரை நிகழ்த்தினார்.
பின்னர் குறும்படம் திரையிடப்பட்டது அரங்கமே மகிழ்ச்சியில் திளைத்தது. பாரதியின் வாழ்க்கை பற்றிய புகைப்படங்களுடன் துவங்கிய குறும்படம் பாரதியின் பெருமையை பறைசாற்றிய விதமாக அமைந்தது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. அனைவரின் பாராட்டையும் பெற்றது.
பிறகு பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பானதொரு நன்றி உரையை திருமதி மல்லிகா அவர்கள் நிகழ்த்த பின் நாட்டுப்பண் இசைக்கப்பட்டு பாரதி பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியின் வெற்றியாக அமைந்த நிகழ்வுகள்: புதியதொரு சிந்தனையை, இதுவரையில் பொது வெளியில் பேசப்படாத தேசியக்கவி அவரின் வசன கவிதைகள் வள்ளுவன் கம்பன் இளங்கோ வரிசையில் பாரதி போன்ற பல அரிய தகவல் பரிமாற்றங்களோடு பாரதியின் புகழ் பாடிய நிகழ்வாக *உரையாடலாம் வாங்க* அமைந்ததும்,
இதுவரையில் மேடை ஏறாத சிலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக உரையாடியதும்,
நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் பதாகையை எதிர்காலத்திலும் உயர்த்தி பிடித்து செல்லக்கூடிய அளவிலே இளஞ்சிட்டுக்கள் பேசியும் குறும்படத்தில் நடித்தும் கலக்கிய விதம் பெரிய நம்பிக்கையை மூத்தவர்களுக்கு உருவாக்கியதும்
அறிவாற்றல் கொண்ட திறமைசாலி ஒருவர் நிகழ்ச்சியை வழிநடத்தியதும்,
புதிய புதிய பேச்சாளர்கள் திறமைசாலிகள் தொடர்ந்து மேடையேறும் நல்ல நிகழ்வுகளும்
போன்ற பற்பல மகிழ்ச்சி தரும் விடயங்கள் இன்றைய பாரதி பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் ஆகும்.
*நன்றி நவிலல்*
இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டபடி மிகச் சிறப்பாக நடத்தி முடிக்க உதவிய கரத்தாலும் ஒத்துழைத்த அனைத்து நல் இதயங்களுக்கும் தமிழ் சங்கம் நன்றி பாராட்டுகிறது.
உரையாடலாம் வாங்க என நாம் முன்னெடுத்த ஒரு புதிய முயற்சி மாபெரும் வெற்றி பெற உழைத்திட்ட பங்கேற்பாளர்களுக்கும் மிகச் சிறப்பாக வழி நடத்திய சண்முகசுந்தரம் ஐயா அவர்களுக்கும் உளம் நிறை நன்றிகள்.
குறும்பட தயாரிப்பில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு சாய்ராம் அவர்கள் வழிகாட்டுதல் செயல்பட்ட இயக்குனர் ஒளிப்பதிவாளர் தேவி அருண் கதை வசனம் எழுதிய சுல்தானா உதவி இயக்குனர்களாக பணியாற்றிய மலர்விழி அமுதவல்லி ஸ்ரீவித்யா உள்ளடக்கிய படப்பிடிப்பு குழுவினருக்கும் பங்கேற்ற கலைஞர்களுக்கும் சிறப்பு நன்றிகள்.
நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய திருமதி காமாட்சி அவர்களுக்கும் நமது நன்றிகள்.
கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக நமது குடியிருப்பில் கொண்டாடப்பட்ட போதும் பெருமளவில் நமது அரங்கமே நிரம்பி வழிகிற அளவிற்கு கலந்து கொண்டு உற்சாகம் தந்த தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பூர்வா குடி வாசிகள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
No comments:
Post a Comment