Monday, December 1, 2025

 *{7} தன் சிந்தனையில் உதித்த காப்பிய வடிவத்தை இளங்கோ அடிகள் உரைத்தல்*


*முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது, அடிகள்! நீரே அருளுக’* – என சாத்தனார் வேண்டியதும், 


அதனை ஏற்ற

அடிகளும்

மனமகிழ்வோடு

சொல்லலுற்றார்: 



"மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்


மனையறம் படுத்த காதையும், நடம் நவில்


மங்கை மாதவி அரங்கேற்று காதையும்,



அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையும்,


இந்திர விழவு ஊர் எடுத்த காதையும்,


கடல் ஆடு காதையும், 


மடல் அவிழ் கானல் வரியும், வேனில் வந்து இறுத்தென


மாதவி இரங்கிய காதையும், தீது உடைக்



கனாத் திறம் உரைத்த காதையும், வினாத் திறத்து


நாடு காண் காதையும், காடு காண் காதையும்,


வேட்டுவ வரியும், தோட்டு அலர் கோதையொடு


புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்கு இசை


ஊர் காண் காதையும், சீர்சால் நங்கை


அடைக்கலக் காதையும், கொலைக்களக் காதையும்,


ஆய்ச்சியர் குரவையும், தீத் திறம் கேட்ட 


துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய


ஊர் சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு


வழக்கு உரை காதையும், வஞ்சின மாலையும்


அழல் படு காதையும், அரும் தெய்வம் 

தோன்றிக்


கட்டுரை காதையும், மட்டு அலர் கோதையர்


குன்றக் குரவையும்-என்று, இவை அனைத்துடன்


காட்சி, கால்கோள்

நீர்ப்படை, நடுகல்,

வாழ்த்து, வரம் தரு காதையொடு"


படைத்தளிப்பேன் என்று உறுதி சொன்னார். 


அதாவது,


1. மங்கல வாழ்த்துப் பாடலும், 

2. குரவர் மனையறம் படுத்த காதையும், 

3. நடம் நவில் மங்கை மாதவி அரங்கேற்று காதையும்,

4. அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையும், 

5. இந்திர விழவு ஊர் எடுத்த காதையும், 

6. கடல் ஆடு காதையும், 

7. மடல் அவிழ் கானல் வரியும், 

8. வேனில் வந்து இறுத்தென மாதவி இரங்கிய காதையும், 

9. தீது உடைக் கனாத் திறம் உரைத்த காதையும், 

10. வினாத் திறத்து நாடு காண் காதையும், 

11. காடு காண் காதையும், 

12. வேட்டுவ வரியும், 

13. தோட்டு அலர் கோதையொடு புறஞ்சேரி இறுத்த காதையும், 

14. கறங்கு இசை ஊர் காண் காதையும், 

15. சீர்சால் நங்கை அடைக்கலக் காதையும், 

16. கொலைக்களக் காதையும், 

17. ஆய்ச்சியர் குரவையும், 

18. தீத் திறம் கேட்ட  துன்ப மாலையும், 

19. நண்பகல் நடுங்கிய ஊர் சூழ் வரியும், 

20. சீர்சால் வேந்தனொடு வழக்கு உரை காதையும், 

21. வஞ்சின மாலையும்

22. அழல் படு காதையும், 

23. அரும் தெய்வம் தோன்றிக் கட்டுரை காதையும், 

24. மட்டு அலர் கோதையர் குன்றக் குரவையும்-என்று, இவை அனைத்துடன்

25. காட்சி, 

26. கால்கோள், 

27. நீர்ப்படை, 

28. நடுகல், 

29. வாழ்த்து, 

30. வரம் தரு காதையொடு

இப்படி 30 காதைகளாக 


இளங்கோவடிகள் வகுத்துக் கொண்டதாக உரைத்தார்.


30 காதைகளும் 

புகார் காண்டம், 

மதுரை காண்டம், 

வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களில் அடங்கவும் 

முடிவு எடுத்தார். 


தன் தோழர் கேட்டதற்கு இணங்க 

காப்பியம் படைக்க ஒத்துக்கொண்ட அடிகளும் 

அதனை உறுதியாகக் கூறுகையில் 

தனது காப்பியம் 

மூன்று காண்டங்களோடும் 

30 காதைகளோடும் வரும் எனக் கூறியது விந்தையிலும் விந்தை அன்றோ.


அத்துனை தெளிவாக 

அவரது சிந்தனை இருந்ததும் வியப்பன்றோ!


இப்படி  நூலின் பகுப்பு முறையை கூறும் பதிக மரபு என்பர்.


இப்படியாக சிலம்பு ஒலிக்க அன்று 

வித்தொன்று விழுந்தது 

நல் முத்தொன்று விளைந்தது.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...