Monday, December 1, 2025

மழை

 

மாதம் மும்மாரி பெய்து

மண்மணக்கச் செய்துவந்தாய்

சூது வாது தானறியா 

சுற்றங்கள் ஒன்று கூடி 

நீ வரும் வழியெல்லாம்

மலர்தூவி வணங்கி நிற்பர்

சேதம் ஏதும் வாராமல்

செழிக்கச்செய் மாரியென்று 

நீயும் 

பசி நீங்கி உயிர்கள் வாழ

பருவம் பார்த்து வந்து

பயிர் செழிக்க வழிசெய்தாய் 

இன்று

தோன்றும் பொழுதெல்லாம்

தொல்லுலகில் பொழிகின்றாய்

மேக வெடிப்பென்று 

மேருவையே வீழ்த்தும்படி 

ஆவேசமாய் வந்து

அழிவு பல செய்கின்றாய்

மாமழையே!

ஏனிந்த மாற்றம் உன்னுள்

எம் பிழைதான் காரணமா

பிழை பொறுத்து அருள்வாயே

இப் பெருந்துயரைத் தவிர்ப்பாயே .

===================================

மழை நாளில்,  

மண் பாதையில் 

நீ நடந்து வரும்போது

சேற்றில் முளைக்கும் 

செந்தாமரை 

உன் பாதங்கள்!!!



- தியாகராஜன்


----------------------------------

மழையும் முதியோரும் ஒன்று.......

இருக்கும் பொது கொண்டாடுவதில்லை.........

இல்லாத போது ஏங்கி திண்டாடுவோம்



.....😞சாயி😞



---------------

மழை ஓய்ந்துவிட்டது 

பேச்சு ஓயவில்லை


காற்று ஓய்ந்துவிட்டது 

கதைகள் ஓயவில்லை 


கண் ஓய்ந்துவிட்டது

கனவுகள் ஓயவில்லை 


கை ஓய்ந்துவிட்டது 

வேலைகள் ஓயவில்லை 


கால் ஓய்ந்துவிட்டது 

பயணங்கள் ஓயவில்லை 


மனம் ஓய்ந்துவிட்டது 

எண்ணங்கள் ஓயவில்லை


எது ஓய்ந்தாலும்

பூமியும் வாழ்வும் ஓய்வதில்லை...


- அமுதவல்லி,

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...