மாதம் மும்மாரி பெய்து
மண்மணக்கச் செய்துவந்தாய்
சூது வாது தானறியா
சுற்றங்கள் ஒன்று கூடி
நீ வரும் வழியெல்லாம்
மலர்தூவி வணங்கி நிற்பர்
சேதம் ஏதும் வாராமல்
செழிக்கச்செய் மாரியென்று
நீயும்
பசி நீங்கி உயிர்கள் வாழ
பருவம் பார்த்து வந்து
பயிர் செழிக்க வழிசெய்தாய்
இன்று
தோன்றும் பொழுதெல்லாம்
தொல்லுலகில் பொழிகின்றாய்
மேக வெடிப்பென்று
மேருவையே வீழ்த்தும்படி
ஆவேசமாய் வந்து
அழிவு பல செய்கின்றாய்
மாமழையே!
ஏனிந்த மாற்றம் உன்னுள்
எம் பிழைதான் காரணமா
பிழை பொறுத்து அருள்வாயே
இப் பெருந்துயரைத் தவிர்ப்பாயே .
===================================
மழை நாளில்,
மண் பாதையில்
நீ நடந்து வரும்போது
சேற்றில் முளைக்கும்
செந்தாமரை
உன் பாதங்கள்!!!
- தியாகராஜன்
----------------------------------
மழையும் முதியோரும் ஒன்று.......
இருக்கும் பொது கொண்டாடுவதில்லை.........
இல்லாத போது ஏங்கி திண்டாடுவோம்
.....😞சாயி😞
---------------
மழை ஓய்ந்துவிட்டது
பேச்சு ஓயவில்லை
காற்று ஓய்ந்துவிட்டது
கதைகள் ஓயவில்லை
கண் ஓய்ந்துவிட்டது
கனவுகள் ஓயவில்லை
கை ஓய்ந்துவிட்டது
வேலைகள் ஓயவில்லை
கால் ஓய்ந்துவிட்டது
பயணங்கள் ஓயவில்லை
மனம் ஓய்ந்துவிட்டது
எண்ணங்கள் ஓயவில்லை
எது ஓய்ந்தாலும்
பூமியும் வாழ்வும் ஓய்வதில்லை...
- அமுதவல்லி,
No comments:
Post a Comment