உப்புமா 20
கழுதைகள் எங்கே?
விதியே என்று பொதி சுமப்பாய்
வண்ணார் வீட்டுப் பிள்ளையாய் நீயும் வளர்வாய்
வைக்கோல் புல் கிடைக்காவிட்டால்
பசியோடு தூங்க முடியுமா இரவு?
உனக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழிக்க பாரதியும் வரமாட்டான் என்பதால தானே
காகிதத்தோடு உனக்கு உறவு!
நீ உண்ணும் காகிதத்தை எரித்து உண்டுவிடும் கற்பூரத்தின் வாசனை
உனக்கு ஏன் தெரிந்திருக்க வேண்டும்?
ஊர் மக்களின் எதிர்ப்பார்புக்கெல்லாம் நீயா
நோக வேண்டும்?
தெருத்தெருவா சுத்தறே
குட்டிச்சுவர் கண்டால் நிக்கிறே
ஏன் இப்படி கழுதை மாதிரி கத்தறே?உன்னை கேட்க முடியுமா
என்று தானே நினைக்கிறே????!!!!
குழந்தை கத்தவும் உந்தன் பால்
குளிக்க கிளியோபாட்ராவுக்கு வேண்டும் உந்தன் பால்
குள்ளமாகிப் போன குதிரை இனமே!
உன்னை மீண்டும் பார்க்க ஏங்குது மனமே!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment