நற்சுனை 23
ஊடல்
எதற்காக உன் மீது கோபப்பட்டேன்?
அடிக்கடி மறந்துவிடுகிறது...
எனக்கு நானே நினைவுறுத்திக் கொண்டே
நியாயப்படுத்திக் கொண்டே
மறந்துவிடுவேனோ என்றும்
மறக்காமலே இருந்துவிடுவேனோ
என்றும் பயந்துகொண்டே
எதிரியில்லா உன்னிடம்
எதிரில் வராமல் உன்னிடம்
மனதில இருக்கும் உன்னிடம்
போர் புரிந்துகொண்டும்
கோபமாகவே இருக்க
முயற்சித்துக் கொண்டும்
எப்போதும் உன்னையே
நினைத்துக் கொண்டும்
இருக்கிறேன்...
உடைக்கப்படாத ஊடலில்
நான்..
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment