Monday, November 17, 2025

காலையில் கண்ணில் பட்டது

 காலையில் கண்ணில் பட்டது 


சிலிர்த்துச் சிரிக்கும் செடிகள், மரங்கள் அவை

   சிறு மழை தான் ஆனாலும் குளிர்ந்தது சென்னை 


உலையில் வெந்த அரிசியாய் தரையில் பூக்கள் 

   ஒருக்காலும் தப்பாது "அக்ரி" அவர் கண்கள் 


எலிவளையாம் வீடு வாங்க கோடிகளை அழுகிறோம் 

   ஏசி, பொய்க்  கூரையில் பொய்யாய் வாழ்கிறோம்


வலியில் இயற்கையின் ஓலம் என்று தான் கேட்கும் 

   வரும் தலைமுறை பாவம் வட்டியும் கட்டும் 


__. குத்தனூர் சேஷுதாஸ் 18/11/2025

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...