காலையில் கண்ணில் பட்டது
சிலிர்த்துச் சிரிக்கும் செடிகள், மரங்கள் அவை
சிறு மழை தான் ஆனாலும் குளிர்ந்தது சென்னை
உலையில் வெந்த அரிசியாய் தரையில் பூக்கள்
ஒருக்காலும் தப்பாது "அக்ரி" அவர் கண்கள்
எலிவளையாம் வீடு வாங்க கோடிகளை அழுகிறோம்
ஏசி, பொய்க் கூரையில் பொய்யாய் வாழ்கிறோம்
வலியில் இயற்கையின் ஓலம் என்று தான் கேட்கும்
வரும் தலைமுறை பாவம் வட்டியும் கட்டும்
__. குத்தனூர் சேஷுதாஸ் 18/11/2025
No comments:
Post a Comment