Saturday, November 8, 2025

நிலை- வண்ணநிலவன் ஒரு கண்ணோட்டம்

சிறுகதை-

நிலை- வண்ணநிலவன்

ஒரு கண்ணோட்டம்

-------------

கோமு ஒரு பெரிய வீட்டில் பணியாள்; பல பணிகளை ஒரே சமயத்தில் ஆளுபவள். 


ஊர்த்திருவிழாவில்அன்று தேர். ஊரே கூடி இழுத்து, கூடி இருந்து குதூகலிக்கும் நாள். 


கோமுவுக்கும் சென்று பார்க்க ஆசைதான். ஆனால் முடியாதே!


வீட்டை இவள் பொறுப்பில் விட்டுவிட்டு, " எசமான்" கூட்டம் இறையருள்  பெற சென்றுவிட்டது. 

படுத்துக்கிடக்கும் பெரிய ஆச்சியைப் பேண வேண்டிய கடமை வேறு.


தேர் நிலைக்கு வந்த பிறகு, வீட்டோர் வந்த பிறகு, தேர் முட்டிக்கு சென்று வடம்தொட்டு கும்பிடுகிறாள்.


இதுதான் சார் கதை!

இதற்குள் எத்தனை எழுத்தோவியங்கள்!


உதாரணங்கள்:

" எதிர் வீட்டுத் தையல்கார ர் வீட்டில்  பச்சை வெட்டுத்துணி; திக்குப்பச்சை இல்லை; ஈர விறகுக்கு, தோலி உரித்த மாதிரி."


" லாலா சத்திர முக்கில் இருந்து ராயல் டாக்கீஸ் முக்கு வரை தேர் ஒரே ஓட்டமாக ஓடியதாம்; தேர் அசைந்து வர்ர மாதிரி என்கிறதுசரியாகத்தான் இருக்கிறதாம்" - 


சொல்லோவியங்கள்!


வட்டார வழக்கு மொழிகள் அறிய அறிய இன்பம்-அழிக்கதவு,ஓட்டுச்சாய்ப்பு,மச்சுத்தட்டோட்டி,கிரு கிரு மிட்டாய்க்காரனின், ரோஸ், ரோஸ் ஆன கம்மாளிக்கொட்டை......


தேர் நிலைக்கு வந்த பின்பே, கோமுவால் பார்க்க முடிந்தது; அது அசையாமல் இவளைப் பார்த்து " நிலை " கொண்டது. 


இவள் நிலை ?


துவையலுக்குப் பொரிகடலையும், தேங்காயும் வாங்கிக்கொண்டு ஓட வேண்டுமே?!


சின்னக்கருவை வைத்து, சிறப்புச்சிறுகதை!


சண்முகசுந்தரம் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...