சிறுகதை-
நிலை- வண்ணநிலவன்
ஒரு கண்ணோட்டம்
-------------
கோமு ஒரு பெரிய வீட்டில் பணியாள்; பல பணிகளை ஒரே சமயத்தில் ஆளுபவள்.
ஊர்த்திருவிழாவில்அன்று தேர். ஊரே கூடி இழுத்து, கூடி இருந்து குதூகலிக்கும் நாள்.
கோமுவுக்கும் சென்று பார்க்க ஆசைதான். ஆனால் முடியாதே!
வீட்டை இவள் பொறுப்பில் விட்டுவிட்டு, " எசமான்" கூட்டம் இறையருள் பெற சென்றுவிட்டது.
படுத்துக்கிடக்கும் பெரிய ஆச்சியைப் பேண வேண்டிய கடமை வேறு.
தேர் நிலைக்கு வந்த பிறகு, வீட்டோர் வந்த பிறகு, தேர் முட்டிக்கு சென்று வடம்தொட்டு கும்பிடுகிறாள்.
இதுதான் சார் கதை!
இதற்குள் எத்தனை எழுத்தோவியங்கள்!
உதாரணங்கள்:
" எதிர் வீட்டுத் தையல்கார ர் வீட்டில் பச்சை வெட்டுத்துணி; திக்குப்பச்சை இல்லை; ஈர விறகுக்கு, தோலி உரித்த மாதிரி."
" லாலா சத்திர முக்கில் இருந்து ராயல் டாக்கீஸ் முக்கு வரை தேர் ஒரே ஓட்டமாக ஓடியதாம்; தேர் அசைந்து வர்ர மாதிரி என்கிறதுசரியாகத்தான் இருக்கிறதாம்" -
சொல்லோவியங்கள்!
வட்டார வழக்கு மொழிகள் அறிய அறிய இன்பம்-அழிக்கதவு,ஓட்டுச்சாய்ப்பு,மச்சுத்தட்டோட்டி,கிரு கிரு மிட்டாய்க்காரனின், ரோஸ், ரோஸ் ஆன கம்மாளிக்கொட்டை......
தேர் நிலைக்கு வந்த பின்பே, கோமுவால் பார்க்க முடிந்தது; அது அசையாமல் இவளைப் பார்த்து " நிலை " கொண்டது.
இவள் நிலை ?
துவையலுக்குப் பொரிகடலையும், தேங்காயும் வாங்கிக்கொண்டு ஓட வேண்டுமே?!
சின்னக்கருவை வைத்து, சிறப்புச்சிறுகதை!
சண்முகசுந்தரம் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏
No comments:
Post a Comment