*வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு (நான்காம் அமர்வு) விவரணம்*
9.11.2025 ஞாயிறு மாலை 5 மணிக்கு நான்காம் அமர்வு துவங்கியது.
சிறார்களுக்கான வாசிப்பு அரங்கில் கலந்து கொண்ட சிறார்கள்:
நிவர்சனா,
ஜனனி,
அகரன்,
ஆதவன்,
ஸ்ரீயாழினி,
திருவிக்ரம்,
ஸ்ரீநிகேதன்,
ஆதவ்,
அர்மான்,
அர்ஃபா,
சாய் பிரணவ்,
ஆதிரா,
ஸ்ரீராம்,
ஸ்ரீவத்சன்,
சம்ரித்,
ஜியோ,
கௌசலேஷ்
பெரியோருக்கான வாசிப்பு அரங்கில் கலந்து கொண்டவர்கள்:
ஸ்ரீவி,
மகாலட்சுமி,
சிவகாமி,
காமாட்சி,
சுல்தானா, தியாகராஜன், லட்சுமி நாராயணன், சாய்ராம்,
தேவி அருண்,
துர்கா,
மல்லிகா,
லக்ஷ்மி,
ஆர். சண்முகசுந்தரம், லதா,
வெ. நாகராஜன்
சு .தே. நாகராஜன்,
அ. ராபர்ட் சேம்,
ஆர். சுப்பிரமணியன் மல்லிகாமணி
நமது இந்த நான்கு அமர்வுகளில், முதன் முறையாக தமிழ் சங்க உறுப்பினர் அல்லாத ஓர் அன்பர் கலந்து கொண்டார். அவர் பெயர் திரு. ராபர்ட் சேம். அவரது சுய அறிமுகம் அவரது தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தியது. அவரை நம் சங்க உறுப்பினராக இணையுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.
சிறார்களுக்கான வாசிப்பு அரங்கில் வழக்கம் போல ஒவ்வொரு சிறுவர்களுக்கும் கதைப் புத்தகங்கள் தனித்தனியே வழங்கப்பட்டன. அவர்கள் அதனை வாசித்த பின், அக்கதையை நடித்துக் காட்டச் சொல்லி பொறுப்பாளர் மகாலட்சுமி கூறினார். குழந்தைகளின் வாசித்தலின் வேகம் அதிகரித்துள்ளதை நம்மால் உணர முடிந்தது. பல குழந்தைகள் தாங்கள் வாசித்த கதையினை கதாபாத்திரங்களாக மாறி நடித்துக் காண்பித்த விதம் மிக அருமையாக இருந்தது. நேரத்தை மிகப் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வதும், அவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த பொறுப்பாளர் மகாலட்சுமி ஒவ்வொரு வாரமும் புதிய புதிய செயல் திட்டங்களோடு இந்த அமர்வினை நடத்துவதும் மகாகவி பாரதி தமிழ் சங்கத்திற்கு மிகுந்த பேருவகையையும்
திருப்தியையும் தருகிறது. இம்முயற்சியை ஊக்குவிக்க, பெற்றோர்கள் தொடர்ந்து தங்களது குழந்தைகளை வாசிப்பு வட்டத்திற்கு அனுப்பிட நமது சங்கம் கேட்டுக் கொள்கிறது.
*ஒவ்வொரு அமர்விலும் மிகச் சிறப்பாக புதிய செயல் திட்டங்களுடன் வந்து நடத்துகின்ற மகாலட்சுமி அவர்களுக்கு நமது சங்கத்தின் நன்றிகளும் பாராட்டுதல்களும்.*
அதன் பிறகு பெரியோருக்கான வாசிப்பு வட்டம் துவங்கியது. இதன் பொறுப்பாளர் லட்சுமி நாராயணன்
அவர்கள் திரு கி. ரா. அவர்கள் தொகுத்து வழங்கிய *கரிசல் கதைகள்* என்னும் நூலில் இருந்து *வெயிலோடு போய்* என்கின்ற *திரு தமிழ்ச்செல்வன்* எழுதிய கதையினை வாசித்தார். கோவில்பட்டி மண்ணின் மைந்தரான இவரது எழுத்தில் கோவில்பட்டியின் கரிசல் மண் வாசனை தெரிந்தது. இயல்பான நடையில் மிக வறிய குடும்பத்தைச் சேர்ந்த எளியவர்களின் மன ஓட்டங்களை அருமையாக படம் பிடித்த அந்த கதை அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டது. இந்தக் கதையினை மையப்படுத்தி ஒரு திரைப்படம் வந்துள்ளது என லட்சுமி நாராயணன் கூறியதும், *‘பூ’* என்கின்ற தமிழ் திரைப் படம் இக்கதையை வைத்து எடுக்கப்பட்டதை திருமதி லக்ஷ்மி நினைவு கூர்ந்தார்.
*பொறுப்பாளராக இருந்து மிகப் பொறுப்பாக இந்த அமர்வினை நடத்தி பல புதிய கதைகளை படித்து உறுப்பினரை மகிழ்வுறச் செய்யும் லட்சுமி நாராயணனுக்கு நன்றிகளும் பாராட்டுதல்களும்.*
அதன் பின்னர், இலக்கண வகுப்பு துவங்கியது. திரு. சண்முகசுந்தரம் ஐயா மிகச்சிறப்பாக இலக்கண வகுப்பை நடத்தினார். கடந்த வகுப்புகளின் பாடங்களை நினைவு படுத்தியம் புதிய பாடங்களை எடுத்தும் பல கேள்விகளை கேட்டு மிக உற்சாகமாக வகுப்பினை நடத்தினார். அவர் கேட்ட பல்வேறு கேள்விகளை மிகுந்த ஆர்வத்துடன் நமது உறுப்பினர்கள் பலர் சரியாக பதிலளித்தது இலக்கண வகுப்புகள் சரியான பாதையில் மிகச் சிறப்பாக பயணிக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது. இன்றைய நாளில் தளை பிரித்தலும் வெண்பா செய்யுள் பற்றியும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. பலர் மிகச் சரியாக தளை பிரித்து வெண்பாவின் விதி பொருந்துகிறதா எனப் பார்த்த விதம் அனைவரையும் உற்சாகம் கொள்ள வைத்தது.
*சிறப்பான முறையில் வகுப்பு எடுத்து வரும் திரு. ஆர். சண்முக சுந்தரம் ஐயா அவர்களுக்கு தமிழ்ச் சங்கம் நன்றியறிதல்களை உரித்தாக்குகிறது.*
*நம் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள்!:*
மாதம் இருமுறை கூடும் இந்த அமர்வுகளில் நம் உறுப்பினர்கள் பலரும் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டும். தங்கள் இல்லத்து குழந்தைகளை இந்த அமர்வுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழ்ச்சங்கம் விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறது.
- ஸ்ரீவி
No comments:
Post a Comment