பெயர்த்தியைப்
பள்ளியிலிருந்து
அழைத்து வரும்
மதிய வேளையில்
சாலையில்,
தேர்க் காலில்
அடிபட்ட கன்று போல
தண்ணீர் லாரியில்
அடிபட்ட ஒரு
நாகப்பாம்புக்குட்டி.
நியாயம் கேட்க
சோழனுமில்லை
ஆராய்ச்சி
மணியுமில்லை.
பாம்பைப் பார்த்துப்
பயந்த பெயர்த்தியை
சமாதானப் படுத்த,
தாத்தா இளவயதில்
கிணற்றில் தண்ணீர்ப்
பாம்புடன் விளையாடிக்
கடி பட்ட கதையைச்
சொல்ல,
பெயர்த்தி
நாளை பள்ளியில்,
வகுப்புத் தோழர்களிடம்
நா.முத்துக்குமாரின்
"சுண்டு விரல் தாத்தாக்கள்"
போல தாத்தாவின்
பெருமையைச்
சொல்வாளோ?
- முகம்மது சுலைமான்,
No comments:
Post a Comment