நற்சுனை 24
காத்திருந்து....
காத்துக் கொண்டிருக்கின்றன...
துரத்தப்படாத கனவுகளும்..
மன்னிக்கப்படாத உறவுகளும்..
உறங்கிக் கொண்டிருக்கின்றன...
முயலாமையின் மடியில்
முளைத்து எழும் முயற்சியும்.
இயலாமையின் மடியில்
மன்னித்துவிடும் முதிர்ச்சியும்..
இன்று விழிக்கவேயில்லை!
நாளை
அடுத்த வாரம்
அடுத்த மாதம்
அடுத்த வருடம்
என்றோ ஒரு நாள்.....
உறக்கம் கலைந்துவிடும் என
காத்திருக்கலாம்...
காத்திருப்பது கடினமில்லை..
ஏனோ காலத்தற்கு காத்திருக்க தெரியவில்லை...
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment