*23.11.25 : வாசிப்பு வட்டம் அமர்வு விவரணம்*
23 11 25 ஞாயிறு மாலை 5 மணிக்கு சிறுவர்களுக்கான வாசிப்பு வட்டம் துவங்கியது.
கலந்துகொண்ட குழந்தைகள்:
வருண்,
அகரன்,
ஆதவன்,
ஹர்ஷிதா,
ஆராதனா,
ஜனனி,
சாய் பிரணவ்,
ருத் விக்ரம், கௌசலேஷ், அவினாஷ்,
ஸ்ரீராம்,
அர்ஃபா,
அர்மான்,
ஸ்ரீ நிகேதன்,
நித்தின்,
இளமாறன்.
வழக்கம் போல புதிய செயல் திட்டங்களுடன் பொறுப்பாளர் திருமதி. மகாலட்சுமி அந்த அமர்வை நடத்தினார். நவம்பர் 14 நடந்த குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு வழங்கிய நூல்களை படித்த குழந்தைகள் அதனைப் பற்றி பேசலாம் என்று சொன்னதும், ஜனனி, நித்தின், அர்மான், வருண் ஆகியோர் தாங்கள் படித்த கதைகளை கூறினர். அதன்பின் கலந்து கொண்ட குழந்தைகளை மூன்று அணியினராகப் பிரித்து, அவர்களிடம் ஓர் எழுத்து அடங்கிய சிட்டுகளைக் கொடுத்து அவற்றை வைத்து சொற்களை எழுதுமாறு கூறினார். குழந்தைகள் மிகச் சிறப்பாக அதனை செய்து முடித்தனர். முதல் அணி 40 சொற்களையும் இரண்டாவது அணி 35 சொற்களையும் மூன்றாவது அணி 33 சொற்களையும் கண்டுபிடித்து இருந்தனர். இந்த விளையாட்டை குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் விளையாடியதோடு, பல்வேறு புதிய சொற்களைக் கண்டுபிடித்தது மிகச் சிறப்பாக இருந்தது. இதனை வடிவமைத்த மகாலட்சுமி அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பின்னர் பெரியவர்களுக்கான வாசிப்பு வட்ட அமர்வு தொடங்கியது. அதில் கலந்து கொண்டோர்:
ஸ்ரீவி,
சிவகாமி,
மல்லிகா,
தேவி அருண்,
நா கணேசன், சுல்தானா, தியாகராஜன்,
தியா அனில்,
லட்சுமி நாராயணன்.
இந்த அமர்வில் லட்சுமி நாராயணன் அவர்கள் *திரு. ஜெயமோகன் எழுதிய அறம்* கதைத் தொகுப்பிலிருந்து அறம் எனும் கதையை வாசித்தார்.
1950 களில் எழுத்தாளர்களின் நிலை எவ்வளவு வறிய நிலையில் இருந்தது என்பதும் பதிப்பகத்தார் அவர்களை எப்படி வஞ்சித்தார்கள் என்பதும், இரு எழுத்தாளர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல் மூலம் விளக்கியது மிக அருமையாக இருந்தது. நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதனைப் படித்து பிறரை மகிழ்விக்கின்ற திரு. லட்சுமி நாராயணன் அவர்களுக்கு நன்றி.
நேரமின்மை காரணத்தாலும் அதிக நபர்கள் இல்லாத காரணத்தாலும்
இலக்கண வகுப்பு இன்று நடைபெறவில்லை.
இந்த அமர்வுகளில் குழந்தைகளுக்கான அமர்வில் 15 க்கும் குறையாத குழந்தைகள் தொடர்ந்து கலந்து கொள்வது சிறப்பானது என்றாலும் அந்த எண்ணிக்கையை அதிகப் படுத்த வேண்டும்.
மற்ற அமர்வுகளை விட இந்த அமர்வில் கலந்து கொண்ட பெரியவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே இருந்தது என்பது கவலையைத் தருகிறது. இதைப் பற்றியும் சரியான திட்டமிடுதலும் நடைமுறைப் படுத்துதலும் தேவை.
இவற்றை மனதில் கொண்டு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் பணிகளை செய்திட வேண்டும்.
*ஶ்ரீவி*
தலைவர்.
No comments:
Post a Comment