வறுமையின் கொடிய கரங்கள்
சின்னஞ்சிறு குடும்பம் தன்னை
வாட்டி வதக்கி கசக்கிடும் போது
கையறு நிலையில் அன்னையவளும்
என் செய்வாள் ஐயோ பாவம்!
புன் முறுவல் தவழும் இன்முகம் காட்டி
வாழ்வை மலர்த்தும் மழலைச் செல்வம்
கைப்பிடித்து அன்போடு நிற்கையில்
கவலையுறு தாயும் கை கழுவிச் செல்வாளோ
உழைத்துப் பிழைக்க உறுதி பூணுவாளோ!
அருமைத் தாயும்
உழைத்துக் களைத்து
ஆற அமர அமரும்போது
நெற்றியில் வழியும் வியர்வையை
ஒற்றி எடுத்து ஆசுவாசப் படுத்தும்
அழகுக் குழந்தையின் அன்பினைப் பாரீர்!
பாரினில்
இதற்கேதும் இணையுண்டோ கூறீர்..!
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
No comments:
Post a Comment