கொடுத்தது இயற்கை வெவ்வேறே..
மாடு மேய்த்தவன் புல்லாங்குழல் இசையில்
மயங்கின உயிரெலாம் கேட்டோம் கதையில்
ஆடு மேய்த்தாலும் அகிலத்தை மயக்கலாம்
அறிந்து தன் திறமை வளர்த்தால் வெல்லலாம்
கூடு கட்டவும் தெரியா குயிலிடம் இன்னிசை
கொடுத்தது நமக்கு வெவ்வேறே இயற்கை
ஏடில்லா தாய்ப் பாலில் எழுந்த மழலை முன்னே
எந்த இசைக் கருவியும் நில்லாது தோற்குமே.
__. குத்தனூர் சேஷுதாஸ் 11/11/2025
No comments:
Post a Comment