Tuesday, November 18, 2025

சர்வ தேச ஆண்கள் தினம்

 சர்வ தேச ஆண்கள் தினம் 19/11/2025

-------

சொற பொழிவு:

இத்தினம் உலகளவில் கொண்டாடப்படும் இன்று ஆறு முக்கிய(முதலாம்)கருப்பொருள்களைக் கொண்டது. 

சுருக்கமாக,

ஆண்களின் நல்வாழ்வு, பாலின சமத்துவம், மற்றும் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்புகளை அங்கீகரிப்பது.


இன்றைய தினத்துக்கான இரண்டாம் கருப்பொருள்:

ஆண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பது.


ஓர் ஆணின் பார்வையில்:


ஆண்கள் என்றால் பாலன் முதல் விருத்தன் வரை அடக்கமாம்.


இன்று பெண்சிறார்கள் போல் ஆண்சிறார்களையும் பாதுகாக்க வேண்டிய காலகட்டம்.


பாலியல் தொல்லை, போதைப்பொருள்களின் வசீகரம்

எனப்பலப்பல அரக்கர் பிடிகள்😔


காந்திஜியின் சத்திய சோதனையிலருந்து இன்று சமூகம் சுய சோதனை செய்ய வேண்டிய நேரம்.


இந்த நாளிலிருந்தாவது ஆரம்பிக்கலாம்.


ஆண்கள் தினம் என்றால் பெண்கள் நினைக்கப்பட மாட்டாரா?


        எப்படிங்க?!


பெண்வயிற்றில் 10 மாத சுக வாசம்தானே ஒரு ஆண்மகனை சமூகம் அறியச்செய்கிறது!


தனித்தனி தினமாக ஆண்களையும், பெண்களையும் போற்றுதல் அவர்தம் தனிச்சிறப்புகளை , குடும்ப, சமூக பங்களிப்புகளை நன்றியுடன் நினைவு கூறதான்.


ஆண்களின் குறை தீர்க்க நாம் இங்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் துவங்க வேண்டுமோ?!


குகையா , குத்தால அருவியா?

பார்வைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்.


 ஒவ்வொரு ஆண்மகனுக்கும்(( வெற்றிகனமானவரோ இல்லையோ!) அவருக்குத்துணை நிற்கும்  பெண்மகளுக்கும் சேர்த்து வாழ்த்து கூறுவோம்🙏🙏


- மோகன்



--------------------

சர்வதேச ஆண்கள் தினம்…

ஆண்களைப் பெண்களும் பாட வேண்டுமா?

ஆண் பாவம் பொல்லாததா?

ஆம்… ஆண் பாவம் தான்.

ஆனால் அந்தப் பாவத்தனத்துக்கு ஒரே காரணம்,

அவனுடைய மிகப்பெரிய weakness:

*புகழ்ச்சிக்கு மயங்குவது.*

நல்லவன், பொறுப்புள்ளவன், குடும்பத்தைக் காப்பாத்துறவன்

என்று சொல்லி சொல்லியே அவனை ஒரு இளிச்சவாயனாக,

ஒரு manufacturing defect-ஆக மாற்றி விட்டார்கள்.

மூத்தவனாகப் பிறந்துவிட்டால்?

தம்பி-தங்கைகளுக்கு திருமணம் முடித்து,

சொத்து எழுதிக் கொடுத்து,

கடைசியில் தன்னை யாராவது *ஏத்துக்குவாங்களா* ன்னு

காத்திருந்து 40 வயசில் திருமணம் பண்ணுவான்.

இல்லையென்றால் தனிமையோடு செத்துப் போவான்.

*ஆண் அழக் கூடாதாம்.*

*ஆம்பிளையா இருந்துட்டு அழுதா எப்படி?*

என்று சினிமாவும் சமூகமும் சொல்லி சொல்லியே

அவன் கவலையை விழுங்கி, இரவு முழுக்க தூங்காமல்

இதய நோயோடு 50 வயசிலேயே போய் சேருவான்.

சொத்தில் பங்கு

பெண்ணுக்கும் சட்டப்படி வரும்.

ஆனால் அப்பாவின் கடன், அம்மாவின் மருத்துவச் செலவு,

வீட்டுக் கடன் என்று வரும்போது!

*நாங்க வேற குடும்பத்துக்குப் போய்விட்டோம்*

என்று சொல்லி விலகிக் கொள்வார்கள்.

கடைசிவரை தூக்குறது ஆண் மட்டும்தான்.

யாருக்காக இவ்வளவு தியாகம்?

யாருக்காக இந்த இளிச்சவாய்த் தனம்?

பெண்ணை மதிக்கிற, குடும்பத்தைத் தாங்க

தன் உயிரையே கொடுக்கத் தயாரான ஆண்களுக்கு

இந்தச் சமூகம் ஒரு பரிசு கொடுத்திருக்கு

அவனை ஒரு “பயன்படுத்தி எறியும் tool” ஆக மாற்றியிருக்கு.

ஆண் பாவம் மட்டும் அல்ல…

ஒரு மடையன், ஒரு இளிச்சவாயன்,

ஒரு manufacturing defect.

இனியாவது புரிந்துகொள்ளுங்கள் 

*ஆண்களுக்கு ஒரு தினம் போதாது.*

அவனுக்கு ஒரு புரட்சி தேவை.

அழ அனுமதிக்கிற புரட்சி.

*இல்லை* என்று சொல்ல அனுமதிக்கிற புரட்சி.

தன் வலியை உரக்கச் சொல்ல அனுமதிக்கிற புரட்சி.

இனிமேல் நாங்கள் இளிச்சவாயர்கள் இல்லை.

நாங்கள் மனிதர்கள் என்று கூற…

சர்வதேச ஆண்கள் தின நல்வாழ்த்துகள்…


- தியாகராஜன்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...