Sunday, November 2, 2025

மரபா..? புதிதா..?

ʥåååååååå

மரபா..? புதிதா..?

•√•√•√•√•√•√•√•√•


உள்ளம் நினைப்பதை 

ஊற்றுநீராய் பெருகுவதை

உள்ளபடியே கூறிடவே 

உலகிற்கு உணர்த்திடவே 

உளமகிழ் சொல்லாட்சியால் 

உரைத்தலே கவிதை எனில் 


அதிலே,


மரபென்ன! புதிதென்ன..!

தமிழன்னை சூடியுள்ள 

மதிப்பிலா மாசறு 

பொன் நகையில்

உயர்ந்ததென்ன ..!

தாழ்ந்ததென்ன..!


பொன் நகையில் 

பழையது எனவும் 

புதியது எனவும் 

பேதம் பார்ப்போர் 

பூவுலகு மீதினிலே

யார் உண்டு சொல்லிடுவீர்!


ஒளிரும் அணிகலன் 

இரண்டுமே அழகுதானே 

தமிழன்னைக்கு 

சூடுதல் பெருமைதானே! 

தமிழ் தந்த நல்லுறவே 

தயங்காமல் கூறிடுவீர்!!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...