குழந்தைகள் தினத்தில்...
வாராது வந்த நம் பாரதியின் தமிழ்ச் சங்கம்
வரலாறு படைத்தது "குழந்தைகள் தினம்"
"நீராரும்" என இசைத்த மழலைக்கு ஒரு ஷொட்டு
நிச்சயம் மகிந்திருப்பாள் தமிழன்னை கேட்டு
வேராம் உறவுகளை விலக்கி வைக்கும் அலைபேசி
விளக்கமாகச் சொன்னார் நம் மகாலட்சுமி
சீரான ஒப்பனையுடன் சிகையலங்காரம்
செய்து அசத்தினார் நம் துர்கா சாய்ராம்
தீராத விளையாட்டுக் கன்றுகளை ஒன்று கூட்டி
திறமைகளைக் கொட்டிய நம் சாய்ராம் சாட்டை
தேரிழுக்க வந்தவர் இன்னுமாம் பல சிறார்கள்
தெள்ளுதமிழ்ப் பேசி, பாடி திகைக்க வைத்தார்கள்
பேரப் பிள்ளைகள் தின்னும் "பாப்கார்ன்" மணம்
பெரியோர்கள் முகத்திலோ ஏக்கம் பாவம்
கார்மேகங்கள் கொட்டியதாய் இருந்தது நிகழ்ச்சி
"காத்திருக்கிறேன் flight modeல்" கெஞ்சிய கைபேசி
__. குத்தனூர் சேஷுதாஸ் 14/11/2025
===============
குதூகலமான குழந்தைகள் தினம்..
மகாகவியே குழந்தைகளாய்
உருவெடுத்து வந்ததே நிதர்சனம்..
உலகெங்கும் முதல் முறையாக மழலை கொஞ்சிய தமிழ்த்தாய் வாழ்த்து
சொப்புவாயால்
திருக்குறள் செப்பிய
சின்னஞ்சிறு சொப்புகள்..
தமிழோடு விளையாடிய
"தமிழ்ப் பேச்சு "முரசுகள்..
இன்னிசையால் இன்னமுதூட்டிய இளங்குயில்கள்
இனிக்க இனிக்க
வரவேற்பு,தொகுப்பு, நன்றி என தமிழை
இழைத்த சந்தன மரங்கள்...
கற்ற தமிழை சோதித்து
கற்கத் தூண்டிய போட்டிகள்..
முத்தாய்ப்பாய் அறையின் இருளையும்
மனங்களின் இருளையும் விரட்டிய
"டீச்சர்"...
"அலைபேசிகள் ஓய்வதில்லை" பற்றி தனிப் பதிவு எழுத ஆசை..தற்போதைக்கு இரத்தினச் சுருக்கமாய்...
"அலைபேசிகள் ஓய்வதில்லை" மனதில் ஏற்படுத்திய அதிர்வலைகள்
(தாக்கம்) இன்னுமும் ஓயவில்லை.
குழந்தைகளையும் குழுவினரையும் பாராட்ட வார்த்தையில்லை.
அடடா.. நேரம் நகர்ந்ததோ ..பறந்ததோ...
- சங்கீதா
-----------------------------------
பூர்வாவில் குழந்தைகள் தினம்
குறும்பு செய்யும் வயதில் மழலை...
குயிலாக இசைத்தது தமிழ்த்தாய் வாழ்த்து
குறிப்புணர்த்தியது நிகழ்ச்சியின் சிறப்பை
பாரதியின் சீர்மிகு வரிகளாம்...
பாலகர்கள் பேச்சின் வீச்சில்
பாரதி சங்கம் கொண்டது பெருமை
குறள்களை வள்ளுவர் செதுக்கினார்...
குதூகலமாக உயிர் தந்தனர் மழலையர்
குளிர்ந்தது கேட்டோர் மனம்
இன்னிசையில் மயங்காதோர் இலர்..
இளங்குயில்களின் மெல்லிசையில்
இதயம் அடைந்தது பேரானந்தம்
வினாடி வினா வினாடிகள்...
விடைகள் சரியோ தவறோ
வியந்து அதிர்ந்தது அரங்கம்
முத்தாய்ப்பாக தமிழ்ச்சங்க குறும்படம்
முதல் முயற்சியே அமர்க்களம்
முல்லை ரோஜாவானது அலங்காரத் திறனால்
முத்து முத்தாய் குழந்தைகள் பேச்சு
முக பாவனைகளோ அசத்தல்
முழுமை தந்தது இயக்கமும் தொகுப்பும்
முத்திரை பதித்தனர் உதவியாளர்கள்
முழக்கம் இட்டது படமல்ல பாடமென
முற்றிலும் மனதைக் கவர்ந்தது...
வரவேற்பும் நன்றி உரைகளும் அழகு
வந்த சிறப்பு விருந்தினரின் உரையும் நன்று
வழிகாட்டும் தலைவர்களுக்கு நன்றி
வந்து சிறப்பித்த உறுப்பினர்களுக்கும் நன்றி
- அமுதவல்லி
No comments:
Post a Comment